Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Tuesday 31 December 2013

மண்ணுக்கு உரமானாவர்

இந்த நூற்றாண்டின் மாமனிதர் நம்மாழ்வார் ஐயா அவர்களை நாம் இழந்து விட்டோம் என்பது இந்த பிறவியில் நான் கேட்ட துயரமான தகவல்.
# ஐயா நீங்கள் ஆலமரம் போல மண்ணுக்கும் , உலகுக்கும் அர்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர்.
~உங்கள் உழைப்புக்கு நாடு தலைவணங்கும்,...உங்கள் முழக்கமான தமிழ் மண் வளத்தைக்காப்போம் தொடர்ந்து~அவரது கல்லறையில் சிமெண்ட் கோயில் கட்டிவிடாதீர்கள்,
அவர் பூஉலகில் உரமாக ,விதையாக ,பூக்களாக பூத்து மண்வளம் காக்க மண்ணுக்கு உரமானாவர்.
அவரின் மறைவு என்பது போராட்டத்தின் உச்சக்கட்டம் இயற்கையின் குலம் காக்க 75 வருடம் வேர்ஊன்றிய பூமித்தாயின் மகன் நம்ஆழ்வார் இன்று உரமானார்.மார்கழி திங்களில் திரு.நம்மாழ்வார் வைகுண்ட பதவி பெற்றார். இப்பூவுலகில் வாழ்ந்த இவர் சொர்கவாசல் சேர்ந்தார்.
# உங்களுடன் மாணவன் இவன்
உமேஷ் மருதாசலம்
30-12-2013

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Monday 16 December 2013

சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை

கொள்ளைப்பாதை:"சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை"என்னும் தலைப்பில் ஆராய்ச்சியாளர் திரு.விஜய் குமார் ,அவர்கள் கோவையில் திரு.வானவராயர் அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.அன்று ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் நமது பாரம்பரிய சின்னங்களை இழந்துவிட்டோம் என்று நம் யாவருக்கும் தெரியும்.இன்றும் அவ்வப்போது செய்திகளில்
கல்,தங்கம் ,வெள்ளி ,செம்புகளாலான சிற்பங்கள்
கைப்பற்றப்பட்டன என்னும் செய்திகளை படிப்பதுண்டு.
அவையாவும் நமது நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளகண்காட்சிகளில்,மாளிகைகளில்,
அருங்காட்சியகத்தில்,கலைக்கூடங்களில் கண்ணாடி பெட்டிக்குள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளன....
உலகஅளவில் செயல்பட்டு வரும் சில கொள்ளையர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்களை நாடு கடத்தி விற்பனை செய்கின்றன.பல ஆலயங்களில் உண்மையான சிலைகளுக்கு பதிலாக போலியானைவை மாற்றி அமைக்கப்படுகின்றன.பெரும்பாலும் சிவ பெருமானின் நடராஜர்சிலைகள் ,முருகன் ,விநாயகர்,காளி,புத்தர்,சிலைகள்
விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தம் ,சுத்தமல்லி ஆலயங்களில் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் மூலம் தான் கண்டறிந்ததை ஆவணத்துடன் விளக்கிக்கூறினார்.ஆஸ்திரேலியா,அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர் மேலும் பல நாடுகளில் சிலைகள் காட்சிப்பொருளாக உரிய ஆவணத்துடன் போலியான முறையில் இருப்பதை ஆவணப்படுத்தினார்.
அவர் ,இப்படி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தில் மட்டும் 15,000 கோவில்களை அடையாளம் கொண்டுள்ளார்."இன்றுவரை நாம் இழந்து போனது இருக்கட்டும் இனியாவது இருப்பதை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கினார்".
அவர் அவர் ஊரின் அருகில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
திரு,விஜய் அவர்களின் நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக இருந்தாலும் அது அரங்கம் நிரம்பிய கூட்டத்துக்கு வாழ்நாளில் மறக்கமுடியாதது.
# இத்தகைய நிகழ்வு நமது கோவையில் நிகழ சூழ்நிலை அமைத்து தந்த "திரு.சங்கர் வானவராயர்" அவர்களுக்கு மண்ணின் மக்களின் நன்றிகள்.
இருளில் நிகளும் திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் ஆய்வுகள் செய்தியாக மட்டும் இல்லாமல் தீர்வுகளுக்கு வழி செய்பவை.
# பாரம்பரியத்தை மீட்டுக்கொண்டு வர ,இங்கு இருப்பதை பாதுகாக்க தேசத்தின் உரிமையினை மீண்டுஎடுக்க போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஒன்று பட்டு போராடுவோம்~வெல்வோம்~
https://www.facebook.com/photo.php?fbid=681134115241610&l=6a3fc14b5a

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

Monday 25 November 2013

லாரி-லாரியாக பிளாஸ்டிக் குப்பைகள்


Tonnes of Hazardous Plastic Waste from Truck Dumped in Noyyal river Kurichi Wetland Coimbatore லாரி-லாரியாக பிளாஸ்டிக் குப்பைகள் /கட்டிடகழிவு மண்களை குறிச்சி குளத்தின் கரையில் கொட்டியவர்களை கண்டுக்கொள்ளாமல் ஆதரிகிறதோ/வேடிக்கை பார்க்கிறதா கோவை அரசு.
குறிச்சிக்குளம் குப்பை மேடாகி விட்டது.குளத்தை தூருவாருகிறோம் என்னும் பெயரில் ஒரு கூட்டம் கிணறு தோண்டிவிட்டு சென்றுள்ளது.பல இடங்களில் கரைகள் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பில் மூழ்கி உள்ளது.
குறிச்சி/குனியமுத்தூர் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக 13 பெரிய குழாய் மூலம் குளத்தினுள் பாய்ந்து வருகிறது.
இப்போதைய நிலையில் குறிச்சி குளம் பாலைவனமாக காட்சி தருகிறது.கண்ணுக்கு கண்ணீரைப்போல ஒரு துளி நீர் கூட இல்லை.குளத்தினை மூடி பேருந்து நிலையம் அமைக்கும் ஆயுத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
7-மதகுகள் மண்கொட்டி மூடப்பட்டு இருந்த தடையம் தெரியாமல் உள்ளது.
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு கரையில் உடைந்து காணப்படுகிறது.
கோவையில் அரசுத்துறை சரிவர இயங்குவதால் தான் குளங்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.அரசுத்துறையை குறை கூறும் முன் நம்மைப்போன்ற பொது மக்கள் தான் உணர்ந்து தாமாக முன்வந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.குறிச்சி குளத்தை சுற்றி சமீக காலங்களில் எல்லைகடந்த ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து கொண்டே வருகின்றன,இது முன்றிலும் குளத்தின் நலனுக்கு கெடுதல் தரும் செயலாக மாறி வருகிறது.உடனடி போர்கால அடிப்படையில் அரசும்/மக்களும் இயங்கினால் மட்டுமே குறிச்சி குளத்தினை பாதுக்காக்க முடியும்.
கடந்த மாதத்தில் பெய்த மழையில் கோவையில் உள்ள எல்லா குளங்களுக்கும் நீர் சென்று நிரம்பிய நிலையில் குறிச்சி குளதிக்கு ஒரு துளி நீர் கூட வந்து சேரவில்லை காரணம் எல்லை கடந்த ஆக்கிரமிப்புகள்.
நீர் துளிகூட இல்லாத குளத்தினைக் காணும் போது எங்கள் தலை சுற்றுகிறது நாளை இந்த குளம் ரியல் எஸ்டேட் வீட்டுமனை ஆகிவிடக்கூடாது என்பதுதான் .
ஒன்று கூடி குறிச்சி குளம் பாதுகாப்போம்
நொய்யல் நதி பாய இடமில்லாமல் தவிக்கிறது
குறிச்சிப்பாலைவனத்தில் இவன்
உமேஷ் மருதாசலம்
25-11-2013

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

Sunday 17 November 2013

Birdwatching in Singanallur Wetland/Lake

Birdwatching in Singanallur Wetland/Lake:
1.Little Grebe
2.Little Cormorant
3.Darter
4.Spot Billed Pelican
5.Indian Shag
6.Large Egret
7.Purple Heron
8.Grey Heron
9.Indian Pond Heron
10.Cattle Egret
11.Median Egret
12.Little Egret
13.Painted Stork
14.Spot-Billed Duck
15.Black Kite
16.Brahminy Kite
17.Grey Francolin
18.Indian Peafowl
19.Common Moorhen
20.Purple Moorhen
21.Common Coot
22.Red-Wattled lapwing
23.Wood Sandpiper
24.Blue Rock Pigeon
25.Eurasian Collared Dove
26.Spotted Dove
27.Little Brown Dove
28.Rose Ringed Parakeet
29.Asian Koel
30Greater Coucal
31.House Swift
32.Asian Palm Swift
33.Small Blue Kingfisher
34.White-Breasted Kingfisher
35.Chestnut-Headed Bee-Eater
36.Blue-Tailed Bee-Eater
37.Indian Roller
38.Common Hoopoe
39.Copper Smith Barbet
40.Lesser Golden-Backet Woodpecker
41.Bush Lark
42.Red-Rumped Swallow
43.Born Swallow
44.Black Drongo
45.Rosy Starling
46.Common Myna
47.House Crow
48.Jungle Crow
49.Red-Vented Bulbul
50.Babbler
51.Ashy Prinia
52.Common Tailorbird
53.Paddy Field Warbler
54.Common Stone Chat
55.White Browed Wagtail
56.Purple Rumped Sunbird
57.Purple Sunbird
58.Spotted Munia
59.Black Headed Munia
60.WHite-Rumped Munia
(Umesh Marudhachalam)
Venue : Singanallur Kulatheri Bus Stop/Boat House,
 Date : 17-11-2013
 Time :05.45 A.m to 10.00 A.m,
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Monday 4 November 2013

ஆஹா இது அதிசயம்

ஆஹா இது அதிசயம் !!!
யானைகளின் மீது எல்லை கடந்த காதலும் ,அவைகளின் நலனில் அக்கறையும் கொண்டவர்கள் தான் இதுபோன்ற ஆவணப்படங்களை எடுக்க முடியும். யானை ஒரு பெரிய உருவம் கொண்ட உயரினம் என்பதைகடந்து யானை பிற உயிரினங்களின் மீது வைத்துள்ள பாசம்/புரிந்துணர்வுகளை இந்த சிறுப்படம் ஆவணப்படுத்தி உள்ளது. இந்த படம் எடுத்த இவர் பாஸ்கரன் அண்ணன் கோவை மாவட்டத்தில் ஏற்படும் மனித யானை மோதல்களுக்கு காரணங்களை கள அனுபவங்களின் மூலம் பேரறிவு பெற்றவர்.இவர் படங்கள் பலரை யானைமீது காதல் கொள்ள வைத்துள்ளது(நான் உட்பட).பல இளைஞர்களுக்கு இவர் வழிகாட்டியாக உள்ளார். யானைகள் நலன் வாழ - மனித-யானை மோதல்கள் தீர்வு காண இவர் ஆவணப்படம்/குறும்படம் எடுக்க எங்களைப்போன்ற சுற்றுசூழல் ஆர்வளர்கள்:வன விரும்பிகள் துணைநிட்போம்.
இவன் தாளியூர் ஜஸ்டின் விரும்பி,
உமேஷ் மருதாசலம்
04-11-2013
<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/ta_IN/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script>
<div class="fb-post" data-href="https://www.facebook.com/photo.php?v=613159365389966" data-width="550"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/photo.php?v=613159365389966">இடுகையிடு</a> by <a href="https://www.facebook.com/baskaran.tts">Baskaran Tts</a>.</div></div>

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Saturday 2 November 2013

காட்டினிலே தினமும் தீபாவளிதான்

காட்டினிலே தினமும் தீபாவளிதான் :
யானை வழித்தடம் ஆக்கிரமித்து வீடு ,தோட்டம் , ஆஸ்ரம் கட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் ஓவ்வொரு ஜீவனுக்கும் 365தினமும் மிரட்டும் தீபாவளிதான்.காடுகளை சுற்றி பட்டாசு சப்தங்கள் தினமும் எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கும்.ஆதி கால மனிதன் நெருப்பினைக்கண்டு பயந்ததைப்போல இன்றும் வன விலங்குகள் பயந்து கொண்டுதான் இருக்கின்றன.அது பயப்படுவதால் தான் மனிதன் தலைகனம் கொண்டு எதிர்த்து திரிகின்றான்.
(சாது மிராண்டா?).
# மர உச்சியில் கூடு கட்டி வாழ்கின்ற பறவைகள் பெரும் புகைகளால் இப்போது மூச்சு முட்டி என்ன ஆகியிருக்குமோ ?
நாளை காலை ஆராய்ந்து பார்ப்போம் !
~தீபஒளி/ஒலி இரவில்~இவன்
உமேஷ் மருதாசலம்
01-11-2013
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Sunday 27 October 2013

விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம்

இன்று என் திட்டங்கள் எல்லாம் மாறிப்போனது காரணம் :
காலை பறவைப்பார்த்தல் நிகழ்வுக்கு சென்ற போது வேப்பமரத்தின் நிழலில் உறங்கிக்கிடந்த விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம் .இரவு முதல் விடியல் காலை நான்கு மணிவரை யானைக்கூட்டம் தனது தக்காளி நிலத்தில் தங்கியதால் உறக்கமிலாத இரவாகிப்போனதை கூறினார்.பின்னர் யானைகள் தங்கிய தக்காளி பூமியினை சென்று நோட்டமிட்டேன் . கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.விவசாயி பலம...ுறை தொலைபேசியில் அழைத்தும் வனத்துறை வந்துசேரவில்லை.அங்கே வனவிலங்கு நீர் அருந்தும் நீர் தொட்டிகள் பராமரிப்பின்றி ,நீர் வரும் ஓடைகள் எல்லாம் தனியார் பல்கலைக்கழகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டேன்.
அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது .பின்னர் காலை உணவை அவர்களின் குடிசை வீட்டில் உண்டு விட்டு மேலும் அந்த பகுதிகளில் கள ஆய்வு செய்தேன். மதியம் வரை சுற்றிப்பார்த்ததில் ஒரே கருத்தாக யானைகளின் வழித்தடம் கல்லூரிகளாக ,ரியல் எஸ்டேட் என பல ஆக்கிரமிப்புகளால் உள்ளன . உடனடியாக வனதுறையினை சேர்ந்த உயர் அதிகாரியினை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் வனவிலங்குகளுக்கும் அப்பாவி விவசாயிகளுக்கும் சந்திக்கும் இன்னல்களைப்பற்றி கூறினேன்.சில நம்பிக்கை தீர்வுதரும் வார்த்தைகளை அவர் தந்தார். அப்பாட என மாலை வீடு திரும்பினே. பின் கோவையின் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் பறவை பார்க்க சந்திப்போம் என அலைபேசியில் அழைத்தார் உக்கடம் குளத்தின் கரையில் சந்தித்தோம். அங்கே கடல் போல செவ்வானம் விரிந்திருக்க குழந்தைகள் குளத்தில் நீந்தி விளையாடுவதை கண்டு மகிழ்தோம்.சிறுவர்களுடன் இணைந்து துண்டு விரித்து மீன் பிடித்தோம்.பெரிய பெரிய நீர் பறவைகள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன .உக்கடம் பேருந்து நிலையம் ஆவின் பாலகத்தில் சுவையான பாதம் பால் அருந்திவிட்டு தித்திப்பாய் நகரப்பேருந்தில் கடந்த வாரம் மரம் நட்ட இடங்களில் நீர் பாய்ச்சி விட்டு ,வீடு திரும்பினேன். இந்த நாளவழக்கத்திற்கு மாறாக இனிய நாளாக மாறியது.
ஞாயிறு பயணி இவன்
~உமேஷ் மருதாசலம்~

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Tuesday 12 February 2013

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,
பனைமரத்தின் ஓலைகள் காய்ந்து செத்து வீழ்ந்தன ,
வெத்தலை மென்னும் மூதாட்டியின் கண்கள் என் வருகையை உற்று நோக்க ,
நாச்சிப்பாளையம் என்னும் தக்காளி மண்டியில் ஆடுகள் சொத்தைப்ப...ழங்களை ருசிக்க ,
வழுக்குப்பாறை கிராமத்தில் மரங்கொத்தி என் கண்முன் நின்றது ,
சொக்கனூரில் செம்பூத்துப் பறவை என் வருகையை ஊருக்கு அறிவித்தது ,
முத்துக்கவுண்டனூர் பள்ளியில் மழலைகள் ஓடி விளையாட ,
அன்று கிளிகள் பறந்து-பறந்து பழம் உண்ட ஆலமரமோ இன்று ஒதுங்க கூட நிழலில்லை,
வாழ இடம் , உண்ண பழம் இல்லை ,
கொண்டைலாத்தி பறவை மரண ஓலம் இட்டது ,
புளியமரங்களில் மைனாக்கள் ருசி பார்க்க ,
பனங்காடை வெயிலில் தாகமாய் அலைய ,
என் முருகன் குடிகொண்ட பசுந்தலைகள் நிறைந்த முத்துமலையோ பாலை நிலமாக காட்சியளிக்க ,
தென்னை மரங்கள் தலையறுத்து தொங்கின ,
வேப்பமரங்கள் காய்ந்து கருகின ,
அரசமர விழுதில் கருங் காக்கைகளோ மெலிந்து சக்தியற்று அமர்ந்தன ,
மண்ணில் ஈரம் கொஞ்சம் கூட தலை காட்டவில்லை ,
விவசாயி உடல் மெலிந்து மழை வேண்டி நின்றான் ,
என் கண்களோ இவைகளைக் காண என்ன பாவம் செய்ததோ ?
மாரி அன்னை எமக்கு அன்ன பிரசாதம் ஊட்டினால் ,
புற்றிடத்தில் குடி கொண்ட சிவபெருமானோ சிவபுராணம் படிக்க வாய்ப்பு தந்தார் ,
ஆஞ்சநேயர் சுண்டல் பிரசாதம் ஊட்டினார் ,
அமாவாசை இரவோ இருளை பரப்ப ,
வீடு நோக்கி உருண்டது என் வாகன சக்கரங்கள் ,
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்(09-02-2013)
இடம் : பாலத்துறை -வழுக்குபாறை -முத்துகவுண்டனூர்-ஒத்தக்கால்மண்டபம்
கோவை மாநகராட்சி (தெற்கு மண்டலம்)
Bird watching in Sunday Morning with School Kids(10-02-2013)
பறவைகளுடன் விடியல் காலை (10-02-2013)
1.Spotted Munia
2.House Sparrow
3.Purple Sunbird
4.Lotens Sunbird
5.Small Sunbird
6.Purple Rumped Sunbird
7.Large Pied Wagtail
8.Yellow Wagtail
9.Paddy Field Pipit
10.Indian Robin
11.Oriental Magpie Robin
12.Common Tailor Bird
13.Ashy Prinia
14.Babbler’s
15.Red-Vented Bulbul
16.Red-Whiskered Bulbul
17.White Browed Bulbul
18.Common Iora
19.House Crow
20.Indian Treepie
21.Common Myna
22.White-Bellies Drongo
23.Black Drongo
24.Eurasian Golden Oriole
25.Red-Rumped Swalow
26.Lesser Golden-Backed Woodpecker
27.Copper Smith Barbet
28.Chestnut-Headed Bee-Eater
29.Indian Roller
30.Common Hoopoe
31.White-Breasted Kingfisher
32.Lesser Pied Kingfisher
33.Small Blue Kingfisher
34.House Swift
35.Spotted Owlet
36.Asian Koel
37.Greater Coucal
38.Pied Crested Cuckoo
39.Rose-Ringed Parakeet
40.Little Brown Dove
41.Spotted Dove
42.Blue Rock Pigeon
43.Wood Sanpiper
44.Red-Wattled Lapwing
45.Black Winged Stilt
46.Common Coot
47.Purple Moorhen
48.Indian Peafowl
49.Grey Francolin
50.Shikra
51.Black Kite
52.Black Shouldered Kite
53.Brahminy Kite
54.Spot-Billied duck
55.Oriental White IBIS
56.Eurasian Spoon Bill
57.Painted Stork
58.Indian Pond Heron
59.Cattle Egret
60.Little Egret
61.Median Egret
62.Grey Heron
63.Purple Heron
64.Spot-Billied Pelican
65.Large Egret
66.Snake Bird/Darter
67.Little Cormorant
68.Little Grebe

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன்







copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன் நொய்யல் அன்னையையும் , அன்னையின் அருள் வடிவான குளங்களையும் பற்றி சிறிது உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது !

தெரியலையே ,புரியலையே !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மழை தரும் மேகங்கள் போன இடம் தெரியலையே ,புரியலையே !!!
மனதினுள் மழை துளிகளில் நினைந்தது போல கனவு இன்று >>>
பாலை வனத்தில் நீச்சல் பயில முடியாது ,இனி
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாது !!!
நீரில்லாமல் ஏதும் இல்லை ,
நம்புவோம் தினமும்
"புது விடியல் இல்லாத உலகம் இல்லை "
-மழை பெய்து கொங்கு நாடு செழிக்க !
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
~எம்மை இயங்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையே -உன்னை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
-பசுமை துளிகள்
~உமேஷ் மருதாசலம்~

ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் மனிதன் இயற்கையை சிதைத்து ,
வளர்ச்சிபெற கற்றுக் கொண்டான் !!!
#இயற்கையை சிதைக்காமல் நமக்கு கிடைக்கும் வளர்ச்சிதான் நிலையான பாரதத்தை உருவாக்கும் !!!
~நாளைய பாரதம் நல்ல ஆராய்ச்சியாளர் கையில் இருக்க வேண்டும்~
-பாரத விரும்பி
உமேஷ் மருதாசலம்

மலைவாழ் மழலைகளுடன் ஒரு நாள் (26-01-2013)

பறவைகள் கூட !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பறவைகள் கூட மரத்தில் இருந்து
உதிர்ந்து விழுந்த குச்சிகளைத் தான்
கூடு கட்ட தேர்வு செய்கின்றன !
#ஆனால் மனிதன் மரங்களை வெட்டி
வீடு அமைக்கின்றான் ,
சாலை அமைக்கிறான் ,
கட்டில் அமைக்கிறான் ,
$ என்று மரங்களை மதித்து உணருவார்கள்
ஆறு அறிவு சுமக்கும் மனிதர்கள் ???
-இயற்கை இனியது
~உமேஷ் மருதாசலம்~

Thursday 7 February 2013

மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை ! -தூய சுவாச வேண்டி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மலர்கள் பூக்கும் மரங்களில் என்றும் வாசம் குறைவதில்லை ,
மலர்களின் வாசம் உணர நவீன கால மனிதர்களுக்கு மூக்குதான் இல்லை ,
மரங்கள் இலை அசைத்து நம்மை வா வா என அன்புடன் அழைத்தாலும் ,
ரம்பம் கொண்டு அறுக்கும் படையுடன் சென்று கொலை செய்கிறான் மனிதன் ,
மனிதர்களுக்கு சுவையான பழம் தந்து ருசி கொடுத்தாலும் -
மனிதன் மரங்களையும் லாபம் ஈட்டித் தருகிற கருவியாகதான் பார்க்கின்றான்
மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை !
-தூய சுவாச வேண்டி
~உமேஷ் மருதாசலம்~

மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
காட்டு/வனச் சாலைகளில் என் பயணங்கள்
(01,02,03-02-2013)
இடம் : ஆனைமலை புலிகள் காப்பகம்
வெள்ளிக் கிழமை சிட்டுக்களுடன் சிறுதுளியில்
குளங்களின் பாதுகாப்பு பற்றி
கோவை பள்ளி மாணவர்களுடன் உரையாடல் ,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரவில் பயணம் ,
காட்டு வழி பயணம் ,
மலையுச்சி செல்லும் வழி எங்கிலும் புலிகள் விரும்பி உண்ணும் -
நான்கு அடி மேல் உயர கடமான் கூட்டமாக நின்றது ,
... புதர் மறைவில் சரகுமான் ஒன்று சாலையோரம் எட்டிப்பார்த்தது ,
முயல்கள் வாகன வெளிச்சம் பட்ட உடன் செய்வதறியாது நின்றது ,
காட்டுப் பன்னிகள் பாறைப்போல உறங்கி இருக்க ,
அமைதியான இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் விரிந்திருக்க ,
கோதுமை ரவை உப்புமா நாவிற்கு ருசிகொடுக்க ,
தூக்கம் என்னை ஆட்கொள்ள ,
காட்டுக் கோழி விடியலை உணர்த்தியது ,
மலை வாழ் மழலைகள் வெந்நீர் அடுப்பருகில்
குளிர் காய ,
காட்டு எருமை ஒன்று எங்கள் சாலையில் குறுக்கிட்டது ,
சூரியன் மேலே வளரத் துவங்கியது ,
கோவை சாலையில் வாகனம் ஊர்ந்தது கீரனத்தம் நோக்கி ,
பிரபல மென் பொருள் நிறுவனம் ஒன்று அரசு பள்ளிகளுக்கான போட்டிகளை நடத்தியது ,
நாள் முழுவதும் மாணவர்களுடன் கழிந்தது ,
பொள்ளாச்சி நோக்கி நகர்ந்தது ,
எலிகள் குறுக்கே நகர ,
புனுகுப் பூனை ஒன்று தலை தூக்க ,
காட்டு மாடு ஒன்று புல் மொய்ந்தது ,
மீன் ஆந்தை ஒன்று பயம் தந்து பெரிதாய்ப் பறக்க ,
மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,
உறங்க நினைக்கையில் கோவைக் குளங்களைப் பற்றி டைம்ஸ் நாளிதழில் என்னுடைய கருத்து வெளிவந்துள்ளதை படித்தேன் ,
செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பருக்கு நன்றிகள் ,
ஞாயிறு விடியும் முன் நீர் பறவைகளைக் காண முத்தண்ணன் குளம்,
கிருஷ்ணாம்பதி குளம் ,
நஞ்ஜராயன் குளம் சென்றோம் ,
குளத்தின நிலைமைக்கு நாம்தான் காரணம் என அங்கு கூடி இருந்த மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் உணரவைத்தேன் ,
"உயர் கல்வி நிலையம் "சென்று
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தேன் ,
வீடு சென்று அம்மா செய்த பச்சைப் பயிர் உண்டேன் ,
பேருந்தில் வீடு திரும்பினேன் ,
குறிச்சிக்குளத்தில் பறவைகளைக் ரசித்தேன் ,
பின் உறங்கினேன் புதிய விடியலைக் காண !!!
களப் பணி விரும்பி
-உமேஷ் மருதாசலம்

டைம்ஸ் செய்தித்தாளில் கோவைக் குளங்களின் இன்றைய நிலை பற்றி (02-02-2012)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
டைம்ஸ் செய்தித்தாளில் கோவைக் குளங்களின் இன்றைய நிலை பற்றி
(02-02-2012)

மாலை நேரப் பயணம் (30-01-2013)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாலை நேரப் பயணம் (30-01-2013)
மாலை சூரியன் பொன்னிறக் கதிர்களை குளத்தில் விரித்துக் நீரினை குடித்து தாகம் தீர்த்து !
பாம்புத்தாரா பறவை ஒன்று குளத்து நடுவில்
காய்ந்த மரத்தில் தன் சிறகுகளை விரித்து வெயிலில் காய்ந்தது ,
நாரைகள் கூட்டமாக உணவு தேடின ,
சின்ன ஜோடி மீன் கொத்தி ஒன்று உணவு தேடி குளக்கரைகளில் அலைந்தது ,
நீர் காகங்கள் அங்கும் - இங்கும் பறந்து மாலை பொழுதை ரசித்தன ,
வாத்துகளோ குளம் விட்டு குளம் ...பறந்து நீரில் குதித்து விளையாடின ,
இவைகளை கரையில் நின்று ரசித்த எனக்கோ
உக்கடம் பேருந்து நிலையத்தில் சுடச்சுட
"பாதாம் பால்" வாய் ருசிக்க ,
பழநி வரை ஆன்மீக நடைப்பயணம் சென்ற பக்தர்களுடன் திராட்சை பழம் ருசித்துக்கொண்டு சுந்தராபுரம் வரை 8-மைல் தூரம் என் வீடு நோக்கி நடந்து சென்றேன் !|
இது ஒரு பக்திப் பயணம் போல
-மாலை நேரப்பயண விரும்பி
~உமேஷ் மருதாசலம்

இலை விரித்து உணவு படைக்கும் வாழை இலைகள் இன்று வறட்சியில் காய்ந்து போய்விட்டன ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

இலை விரித்து உணவு படைக்கும் வாழை இலைகள் இன்று வறட்சியில் காய்ந்து போய்விட்டன ,
விவசாயி என கூறப்படும் நம்மில் ஒருவருக்கு தான் தெரியும் இந்த வாழை- வாடிய வலி ,
இனி எப்படி அன்னதானம் , படையல் ,பூஜை முதலிய முந்திய நடைமுறைகள் நடைமுறையில் எப்படி நட...க்கும் ?
பல அறியவகை வாழைபழ வகைகள் அழிந்து விட்டன ,
தமிழர் விரும்பி உண்ணும் வாழைப்பழம் ஒன்றன் விலை 3-5 R.S ரூவாய் !!!
தலைவிரித்துச் பூச்சூடும் ,
தண்டை அணியும் ,
-வாழை விரும்பி
உமேஷ் மருதாசலம்
மேலும் பார்க்க

சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~


சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

கோவை:வறட்சியால் ஏற்கனவே காய்ந்து போயுள்ள கோவை குளங்கள், வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் சுவடு தெரியாமல் சிறிது, சிறிதாக அழிந்து வருகின்றன. உக்கடம், வாலாங்குளம், அம்மன்குளம் வரிசையில், குறிச்சி குளமும் அடுத்த இரையாகி வருகிறது.பருவமழை பொய்த்துப் போன காலங்களிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வளம் கொழித்து வந்தது நொய்யல் ஆறு. இந்த ஆறுடன் தொடர்புப்படுத்தி, 173 கி.மீ., தூரத்தில் 32 குளங்கள் ஒன்றோடு இணைக்கும் ...விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இதில், கோவை நகர பகுதியில் முக்கியமாக ஒன்பது குளங்கள் இருந்தன. அவற்றில், அம்மன்குளம் இந்த இடமே தெரியாமல், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. எஞ்சியிருப்பவை, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தணம்குளம், செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் மட்டுமே.இவற்றில் மாநகரின் வளர்ச்சித் திட்டங்களில், "பலி கடா'வாகி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் ஆகியவை பரப்பையும், வனப்பையும் இழந்தன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், மின் நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை போன்றவை, இந்த குளங்களுக்குள் அமைந்துள்ளன. இவை தவிர, புதிய ரோடுகள், ரயில்வே பாலங்கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த இரண்டு குளங்களும் பொலிவை இழந்தன. நிலத்தையும், நீர்பரப்பையும் இழந்த இந்த இரண்டு குளங்களிலும் தண்ணீரும் பல காரணங்களால் கடுமையாக மாசுபட்டு வருகிறது.

கழிவுநீர், மருத்துவ கழிவு, டீசல் மற்றும் ஆயில் கழிவு என திடக்கழிவும், திரவக்கழிவுமாக இந்த குளங்கள் பாழடைந்து வருகின்றன.பொதுப்பணித்துறை கைவசம் இருந்த இந்த குளங்கள் 2009ம் ஆண்டு மாநகராட்சிக்கு கைமாறப்பட்டன. 90 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஆண்டுக்கு தலா ரூ. 100 வாடகைக்கு எட்டு குளங்களையும் மாநகராட்சி ஏற்றுக் கொண்டது. பொதுப்பணித் துறையிடம் இருந்து, மாநகராட்சி பொறுப்பில் குளங்கள் வந்தபோது, விடிவுகாலம் பிறக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது."ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில்' நிதி இருந்தும், குளங்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கவில்லை. மழையின்றி குளங்கள் வறண்டு வரும் நிலையில், நீர் ஆதாரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "சிறுதுளி' உள்ளிட்ட அமைப்புகள் குளங்களை தூர் வார முன்வந்து, மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அனுமதி கிடைக்கவில்லை.அதேநேரத்தில், குளங்களை காக்க வேண்டிய மாநகராட்சியோ, இருக்கும் குளங்களையும் சுவடு தெரியாமல் மண் மூடி புதைத்துவிடுவதில் குறியாகவே இருக்கிறது. இதற்கு உதாரணம், குறிச்சி குளம். கோவையின் தெற்கு பகுதிகளை வளம் கொழிக்க செய்த இந்த குளம், இன்று வறண்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி சாலையின் மறுபக்கத்தில் இருந்த சிறிய குளத்தை மூடும் பணியை மாநகராட்சி கச்சிதமாக செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, குளத்தின் பெரும்பாலான பகுதி மண் கொட்டப்பட்டு, மூடப்பட்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமையும்போது அருகில் உள்ள பிரதான குளத்தின் பெரும் பகுதிகளும், பல்வேறு திட்டங்களுக்காக மூடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வழக்கு தொடர திட்டம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தப் போகிறோம் என கூறி, பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை மாநகராட்சி கைப்பற்றியது. எந்த குளங்களையும் அழகுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் குளங்களை, பாதுகாப்பாக பராமரித்தாலே போதுமானது. கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல குளங்கள் இன்று கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன. குறிச்சி குளத்தின் ஒரு பகுதியை மூடி, பஸ் நிலையமாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=634947

தென்றல் காற்று இனிய மொழியால் எங்களை தாக்க ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
கிராமத்துச் சாலைகளில் என் பயணங்கள் (27-01-2013)
இடம் :மரப் பாலம்
(கோவை மாநகராட்சி-தெற்கு மண்டலம்)
சில் என பிறந்தது ஒரு காலைப் பொழுது ,
மாநகர கழிவு நீர் தாங்கிய குளத்தில் கிழக்கே
இனிய சூரிய உதயம் ,
பறவைகள் ஒவ்வொன்றாக கூடு விட்டு குளத்தினை நோக்கி அசைந்து வர ,
மீன்களின் சுதந்திர நீந்தல் தடையானது ,
அம்மம்மா! பறவைகளின் எண்ணிக்கை மிகவும் நீளமானது ,
கற்றுணர என்னுடன் வந்த பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு பிரம...்மாண்ட காட்சி ,
பௌர்ணமி நாளில் தர்மலிங்க மலை வனப்பகுதியில் கிரிவலம் சென்ற அன்பர்கள் தெரியாமல் வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்ய நானும் - ராகுல் என சூழல் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவனும் 2(இரண்டு) கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வனபகுதியில் இருந்து அப்புறம் படுத்தினோம் !
இனி வன விலங்குகள் நிம்மதியாக உணவு உண்ணும் ,
சிறு குழந்தைகள் குண்டு விளையாட ,
காடைப் பறவை அதிக எண்ணிக்கையில் எங்களைக் கண்டு ஓட ,
புதரில் மறைந்த குள்ள நரி ஒன்று எங்களைக் கண்டு முறைத்து ஓட ,
நாங்களும் வன பகுதியினை விட்டு மலைக்கோவிலுக்கு பயணமானோம் !
செங்குத்தலான மலைத்தொடர் அது ,
தர்மலிங்க ஆண்டவர் எங்களுக்கு சிறப்பு சம பந்தியில் அன்னதானம் படைத்து களப்பணி ஆற்றி களைத்துப் போன எங்களுக்கு பலம் ஊட்டினார் ,
தென்றல் காற்று இனிய மொழியால்
எங்களை தாக்க ,
சிவபுராணம் பாடி இறைவனைத் தொழுதோம் ,
நொடிப்பொழுதில் மலைத்தொடர் கீழ் இறங்கினோம் ,
பின் ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் சூழல் சந்திப்பில் மனித-யானை மோதல் என்னும் விவாதத்தில் சங்கமித்தோம் ,
நிலவொளியில் VOC (வஉசி )மைதானத்தில் நண்பருடன் சின்ன உரையாடல் ,
முழு நிலவு படர்ந்த வானின் கீழ்
எறும்புகளைப் போல தைப்பூச நன் நாளில் சாரைச்சாரையாக அரோகரா கோசம் முழங்க ,
ஆயிரம் ஆயிரம் முருக பக்தர்கள் கோவை -பழநி நெடுஞ் சாலைகளில் முரசு கொட்டி மெல்லிய மயில் தோகை தாங்கிய காவடி சுமந்து நடனம் ஆடிச் செல்கின்றனர் கொங்கு நாட்டு கிராம மக்கள் !!!
சமத்துவம் பிறந்தது இந்த பக்திப்பயணத்தில்,
இவர்களுடன் நடைப் பயணம் செல்ல ஆசைதான் -
நவீன கால அவசர உலக கௌரவ படிப்பு வாய்ப்பு அளிக்கவில்லை (வருந்துகிறேன்),
என்று இவர்களுடன் சென்று இறைவனைக்காண்பேன் என்று ?
சமத்துவ பயண விரும்பி
-உமேஷ் மருதாசலம்
Bird Watching(26,27-01-2013)
1. Little Grebe
2. Little Cormorant
3. Snake Bird
4. Spot-Billed Pelican
5. Purple Heron
6. Grey Heron
7. Indian Pond Heron
8. Cattle Heron
9. Little Egret
10. Painted Stork
11. Oriental White IBIS
12. Spot-Billed Duck
13. Black Shouldered Kite
14. Black Kite
15. Brahminy Kite
16. Shikra
17. Black Eagle
18. Pallid Harrier
19. Grey Francolin
20. Grey Jungle Fowl
21. Indian Peafowl
22. White Breasted Waterhen
23. Purple Moorhen
24. Common Coot
25. Red-Wattled Lapwing
26. Common Sandpiper
27. Blue Rock Pigeon
28. Spotted Dove
29. Little Brown Dove
30. Rose-Ringed Parakeet
31. Malabar Parakeet
32. Pied Crested Cuckoo
33. Asian Koel
34. Malkoha
35. Greater Coucal
36. House Swift
37. White-Breasted Kingfisher
38. Chestnut-Headed Bee-Eater
39. Indian Roller
40. Common Hoopoe
41. Copper Smith Barbet
42. Crimson-Throated Barbet
43. Lesser Golden-Backed Woodpecker
44. White Cheeked Barbet
45. Lark
46. Eurasian Golden Oriole
47. Black Drongo
48. White-Bellied Drongo
49. Rosy Starling
50. Brahminy Starling
51. Common Myna
52. Jungle Myna
53. Indian Treepie
54. Common Crow
55. Jungle Crow
56. Common Iora
57. Red-Vented Bulbul
58. Red-Whiskered Bulbul
59. White Browed Bulbul
60. Babbler
61. Asian Paradise Flycatcher
62. Common Tailor Bird
63. Ashy Prinia
64. Magpie Robin
65. Indian Robin
66. Yellow Wagtail
67. Large Pied Wagtail
68. Purple-Rumped Sunbird
69. Small Sunbird
70. Lotens Sunbird
71. Purple Sunbird
72. House Sparrows

மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் "குடியரசு தின" நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் !

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
காட்டுச் சாலைகளில்-புலிக்காட்டில் என்
ஒருநாள் பயணம் (26-01-2013)
இன்று சூழல் நண்பர்களுடன் டாப்ஸ்லிப் -பகுதியில் உள்ள,
மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் "குடியரசு தின" நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் !
கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடியினை நோக்கி தேசிய கீதம் பாடினோம் ,
மழலை குழந்தைகள் கிராமிய பாடலுக்கு குழு நடனம் ஆட ,
மரங்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் நாடகம் நடித்தனர் ,
சிறப்பாக நடித்து , ஆடிய மாணவர்களுக்க...ு "திருக்குறள்" நூல் பரிசளித்தோம் !
அவர்களின் கல்வி மேன்பட தேவையான உதவிகளை கேட்டறிந்தோம் ,
மழையின்றி வாடியது ஆனைமலை புலிகள் காப்பகம் ,
பறவைகள் தலை காட்ட முன்வரவில்லை ,
சுற்றுலா பயணிகளுக்கு வெயிலில் ஏமாற்றம் தான் மிஞ்சியது !
பொள்ளாச்சியில் கால்வாய்களில் நீர் துளி கூடஇல்லை ,
தென்னை மரங்கள் வாடியது ,
பறவைகள் சோக கீதம் பாடியது ,
ஊழலுக்கு எதிராக செயல் படும் இந்திய அளவிலான ஒரு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன் !
-ஊழலற்ற தேசம் வேண்டி
உமேஷ் மருதாசலம்

ஏழைகளுக்கு உதவுவோம் !

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
என் நாட்டு தமிழ் மக்களுக்கு அடுத்த வேலை ஆரோகியமான உணவு உண்ண வழி இல்லாத போது ,
வெறும் அலங்காரம் என்னும் பெயரில் பல வகையான அரியவகை பச்சைக் காய்கறிகளை அலங்கரிப்பது நியாயமா ?
சமீபத்தில் என் கல்லூரி தோழியின் அக்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்து மனது நொந்தது !!!
இது போல மனித நேயம் அற்ற செயல்களை தவிர்ப்போம் !!!
ஏழைகளுக்கு உதவுவோம் !
விவசாயத்தின் முக்கியத்துவத்தை பாரெங்கும் பரப்புவோம்

கண் துடைப்பு செயல்கள...ை செய்ய வேண்டாம் !

copyrights @ umeshmarudhu-2013

 ~Save Nature For Future~
வாலாங்குளம் பெரியளவிலான தொகை முதலீட்டில் சில நாட்கள் முன்பு ஆகாய தாமரை செடிகள் அரசால் அப்புறம் செய்யப்பட்டன !
மாநகரின் சுத்தீகரிக்கப்படாத கழிவு நீர் தேங்கி மீண்டும் செடிகள் குளத்தினை மூடி சூழ்ந்துள்ளது ,
கட்டிட கழிவுகள் கொட்டி குளத்தின் பரப்பளவு சுறுங்கி வருகிறது ,
ஆக்கிரமிப்புகளுக்கு அளவே இல்லை !!!
பல குளங்கள் இன்று குப்பை கிடங்கு போல காட்சி தருகிறது !
இனி அரசாங்கம் இது போன்ற கண் துடைப்பு செயல்கள...ை செய்ய வேண்டாம் !
1.ஒன்று கழிவு நீரினை தேக்காதே ,
2.இரண்டு குளத்தினை ஒட்டி சாலை அமைக்காதே !
~என்று தூய குளத்து நீரினை நான் காண்வேனோ,
அன்று என் சுவாசம் பெருமைக்கொள்ளும்~
தூய பூமியில் இந்த உடல் வாழ்ந்தது என்று !
தூய நீர் வேண்டி
-உமேஷ் மருதாசலம்

நீரற்ற வாழ்வு - உயிரற்றது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
தீ பற்றி எறியும் மேற்கு தொடர்ச்சி மலை தொடர்கள் ,
யார் தீ பற்றி வைகின்றனரோ ?
வறட்சியின் பிடியில் கொங்கு மண்டலம் !
அரியவகை பாம்புகள் , வண்டுகள் , மலர்கள் , மரங்கள் , மூலிகைகள் !
ஏன் ? புலிகள் கூட சிக்கி மடிந்திருக்கலாம் ?
தீயில் கருகி மலர்களுக்கும் வாசம் மறந்துப்போனது !
மரங்கள் கருகிக் காய்ந்தன !
நீரற்ற வாழ்வு - உயிரற்றது
-மழை வேண்டி
உமேஷ் மருதாசலம்

நீரின்றி அமையாது உலகு நீர் வேண்டி-மழை வேண்டி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மேற்கு தொடர்ச்சி மலையில் நீரினை மட்டுமே நம்பி வாழும் உயிரினங்களான
யானைகள் ,நீர் நாய்கள் , முதலைகள் , நீர்ப்பறவைகள் ,தாவரங்கள் , பறவைகள் ,
மாமிச உண்ணிகள் மற்றும் பூச்சிகளுக்கு இந்த கொடிய வறண்ட காலத்தில் நீர் சொட்டு கூட இல்லை !
இவை யாவும் அழிந்து வரும் வகையினை சேர்ந்தவை ,
இவற்றில் ஒன்று அழிந்தால் கூட காட்டின் ஒட்டு மொத்த உணவுச் சங்கிலி பாதிப்படையும் ,
பாதிப்படைந்தால் உணவின்றி பிற உயிரினங்கள் வாடி மடிந்து போகும் !
இவையின்றி மனிதனால் உயிர் வாழ இயலாது ,
நீரின்றி அமையாது உலகு
நீர் வேண்டி-மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்

வறண்ட பூமியில் யானை உணவு தேடி ஊர்வலம் வந்தது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
வாடிய மலர்களை தாங்கிய கொடியினைப் போல ,
நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் உயிர் தியாகம் செய்யப்போகும் சாலையோர
நிழல் தரும் ஆலமரம் ,
காற்று வீசும் அரசமரம் ,
பறவைகளைக் கவரும் புளியமரம் ,
மாசுநீக்கி வேப்பமரம்,
இவையாவும் வெட்டப்பட்டால் ?
வாழ தகுதியில்லா ஊராக மாறும்
கோவை - சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ஒர கிராமங்கள் !
என் மனம் வருந்துவதை கண்ட ,
... சூரியன் தலை குனிந்து மேற்கில் மலையிடுக்கில் மறைந்தான் ,
பச்சைக்கிளிகள் பனைமரப் பொந்தில் உள்ள கூட்டினை தேடி அமைதி அடைந்தன !
எங்கும் இருள் சூழ்ந்தது - இரவு பிறந்தது !
வறண்ட பூமியில் யானை உணவு தேடி ஊர்வலம் வந்தது
~மரம் இறைவன் தந்த சுவையான வரம்~
இயற்கை விரும்பி
-உமேஷ் மருதாசலம்

பவானி அணையில் பறவைகளுடன் பயணம் :
Bird Watching @ Erode Bhavanisagar Dam(21-01-2013)
1.Little Cormorant
2.Little Grebe
3.Darter
4.Little Egret
5.Cattle Egret
6.Common Sandpiper
7.Indian Roller
8.Indian Peafowl
9.Indian Pond Heron
10.Black Kite
11.Brahminy Kite
12.Black Shouldered Kite
13.Shikra
14.Grey Francolin
15.Red Wattled Lapwing
16.Blue Rock Pigeon
17.Spotted Dove
18.Little Brown dove
19.Rose Ringed Parakeet
20.Asian Koel
21.Greater Coucal
22.House Swift
23.White-Breasted Kingfisher
24.Chestnut-Headed Bee-Eater
25.Common Hoopoe
26.Copper smith Barbet(Call)
27.Brown Shrike
28.Black Drongo
29.White-Bellied Drongo
30.Rosy Straling
31.Brahminy Starling
32.Common Myna
33.Indian Treepie(Call)
34.Common Crow
35.White Browed Bulbul
36.Babblers
37.Common Tailor Bird
38.Indian Robin
39.Grey Wagtail
40.Large Pied Wagtail
41.Purple-Rumped Sunbird
42.Loten's Sunbird
43.Purple Sunbird
44.House Sparrow

பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
என் அலுவலக அதிகாரி நீண்ட போராட்டத்தின் பின் எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க ,
சத்தியமங்கலம் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தேன் ,
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் திட்டம் வடிவமைப்பு போட்டியில் நடுவராக சென்றேன் ,
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் போட்டியில் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் ,
இவர்களில் ...யார் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என மதிப்பிடும் பணி சற்று சவாலாகத்தான் எனக்கு இருந்தது ,
மலைவாசிகள் வாழும் கூரை குடிசை வீடுகள் ,
தினமும் வாழ்கையில் பயன்படுத்தும் கருவிகள் என ஆதிவாசி பயன் படுத்திய பழங்கால பொருட்கள் இடம் பெற்றுந்தன ,
அந்த கல்லூரி மாணவர்கள் என்னை சூழ்ந்து பல வினாக்களை எழுப்பினர் ,
அதில் நரேஷ் (Naresh)மாணவன் என்னை யானைகளை காண அழைத்து சென்றான் ,
அழகிய பறவைகள் விளையாடும் கிராமத்துச் சாலையில் பயணம் அது !
அன்று பவானி ஆற்றில் நீர் ஓடிய தடயம் கூட இன்றுயில்லை ,
கூட்டமாக காட்டு எருதுகள் ,யானைகள் அருந்த அணையில் கொஞ்சம் கூட நீரில்லை ,
பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,
மாணவனுடன் மாலை சிறு உணவை உண்டபின் ,
கோவை திரும்பியது என் பயணங்கள் !
என்னை உபசரித்து நல்ல முறையில் கவனித்த நண்பர்களுக்கு நன்றிகள் .
~உமேஷ் மருதாசலம் ~

மக்களிடம் செய்தி சேர்த்து

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பாலமலை தூய்மை பணி செய்தித்தாளில் (21-01-2013)
செய்திதாளில் வெளியிட்டு
மக்களிடம் செய்தி சேர்த்து ,
எங்களை மேலும் களப்பணியில் ஊக்கம் படுத்திய ஊடக நண்பர்களுக்கு நன்றிகள் !

கோவை விமான நிலையம் சென்ற என் பாதங்கள்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
நகரப்பேருந்துதில் கோவை விமான நிலையம் சென்ற என் பாதங்கள் ,
குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் பட்டம் விடும் திருவிழாவில் அடிபட்டு இறந்து போன பல அறியவகை பறவைகளின் உடலில் உள்ள அபாயகரமான ரசாயன ,அளவுகளை அளவிட ஆராய்ச்சி நிலையத்திற்கு கோவை வந்தது ,
இறந்து போன பறவைகளை எங்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்றேன் சேர்த்தேன் ,
பின் பறவைகளை காண மலை பகுதியில் நடைபயணம் சென்றேன் ,
அது ஒரு மலை கிராமம் பேருந...்து வசதி இல்லை பிற போக்குவரத்து வசதி இல்லை,
களைப்பில் தொண்டை ஏங்க ஜீப் ஒன்று மலைவாழ் மக்களை சுமந்து நிறைந்து வந்தது ,
ஜீப்பின் மேலே அமர்ந்து ஆகாய கூரையில் நகரம் சென்றேன் !
காந்திபுரம் சென்ற என் பேருந்து -
சூலூர் குளம் ,பள்ளபாளையம் குளம் ,உக்கடம்-பெரியகுளம் ,குறிச்சி குளம் என குளக்கரையில் பறவைகளை தரிசித்தேன் !
மாலை வீடு சென்றதும் கருங்குயில் கூவி வானம் இருள போவதை கூறியது !
இரவு பிறந்தது
~இரவு விரும்பி~
உமேஷ் மருதாசலம்

காண்பது குளமா இல்லை பாலைவனமா ?

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
கோவையில் நாம்இன்று காண்பது குளமா இல்லை பாலைவனமா ?
நீர் இல்லை , நீர் நின்ற தடயங்களும் இல்லை ,
குப்பைகளும் , கட்டிட கழிவுகள் மட்டுமே நிறைந்த குளத்தில் ,
நாற்றம் தாங்க முடியவில்லை ,
வெறிபிடித்த நாய்களோ குளம் முழுவதும் சூழ்ந்து இருக்க ,
நீர் பறவைகள் வாழ இடம் இல்லை ,
ஆக்கிரமிப்புகள் குளக்கரையில் தலைத்தூக்க ,
குளத்து மரங்கள் எல்லாம் ஏழைகள் விறகுக்காக ஒவ்வொன்றாய் வெட்ட ,
பறவைகள் கூடு கட்டி வாழ மரம் இல்லை... ,
அன்று சோலைவன நீர் தேக்கிய கோவை குளங்கள் ,
இன்று கோவை மாநகரின் கழிவு நீரினை சுமக்கின்றன ,
மீன்களோ நீந்தி விளையாட நீர் இல்லை ,
மீன் பிடிக்கும் மீனவனக்கோ நீரில்லை ,
என்று மக்கள் இந்த வலிகளை உணர்வரோ ?
அன்று தான் இந்த நரக நிலை மாறும்
மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்

பாலமலை தூய்மை பணி(19-01-2013)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பாலமலை தூய்மை பணி(19-01-2013) (6 புகைப்படங்கள்)கிராமத்துச் சாலைகளில் என் பயணங்கள்(19-01-2013)
இடம்: பாலமலை கோயில்
விடியலில் குளத்தில் செங்கால் நாரை ஒன்று உணவுதேட , சரவணம்பட்டியில் சூழல் அக்கறை அணி ஒன்றுதிரள ,
கரிச்சான் குருவிகள் எங்களின் சங்கமத்தை நோட்டம் போட்டன , பின்னர் பயணம் பாலமலை அ...ரங்கநாதர் கோயில் நோக்கி செல்ல , மாங்குயில் ஒன்று எங்களை வரவேற்றது ,
அரங்கநாதர் குடிக்கொண்டுள்ள மலையினை அசுத்தம் செய்ய மனம் வந்தது எப்படியோ ? நீரோடிய பாறைகள் எல்லாம் குப்பைகள் குடிபுகுந்து விட்டன
போதை மது அருந்தும் "மூடர்களோ" யானை செல்லும் பாதையில் மது குவளையை உடைத்து வீசினர் ,
ஆண்டவனை தரிசித்த பிளாஸ்டிக் பைகள் மண்ணில் எறியப்பட்டன தேனீர் தேக்கும் குவளைகள் காடெங்கும் குவிந்தன ,
சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட நண்பர்களோ அணிதிரண்டு கண்ணாடி குவளைகள் ,
பிளாஸ்டிக் குப்பைகளை 70 பைகளில் அப்புறபடுத்தி ,
முறையாக மறுசுழற்சி செய்ய அனுப்பினோம் !
களைப்பில் வாடிய எங்களை ரங்கநாதர் சமபந்தி அன்னதானம் அளித்தார் காட்டினை சுத்தம் செய்யும் அறப்பணியில் என்னையும் அழைத்து ,
விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு தந்து & களப்பணி ஆற்ற வாய்ப்புத் தந்த பிரபல மென்பொருள் நிறுவன தோழர்களுக்கு இயற்கை அன்னை என்றும் அருள்புரிவாள் !
வானில் வட்டமிட்ட சூரியன் மேற்கில் மறைந்தான்
காட்டின் சுகாதாரம் - நாட்டின் சுகாதாரம்
~உமேஷ் மருதாசலம்~
Bird Watching @ Palamalai Tribal Village(19-01-2013)
1. House Sparrow
2. Purple Sunbird
3. Large Pied Wagtail
4. Yellow Wagtail
5. Indian Robin
6. Pied Bushchat
7. Oriental Magpie Robin
8. Common Tailor Bird
9. Asian paradise-Flycatcher
10. Babblers
11. White-Browed Bulbul
12. Red-Whiskered Bulbul
13. Red-Vented Bulbul
14. House Crow
15. Jungle Crow
16. Indian Treepie
17. Common Hill Myna
18. Common Myna
19. Black Drongo
20. White-Bellied Drongo
21. Eurasian Golden Oriole
22. White Cheeked Barbet
23. Crimson-Throated Barbet
24. Copper Smith Barbet
25. Common Hoopoe
26. Indian Roller
27. Chestnut-Headed Bee-Eater
28. White-Breasted Kingfisher
29. Asian Koel
30. Greater Coucal
31. Rose-Ringed Parakeet
32. Blue Rock Pigeon
33. Spotted Dove
34. Little Brown Dove
35. Indian Peafowl
36. Red-Wattled Lapwing(Kurichi)
37. Common Sandpiper(Kurichi)
38. Purple Moorhen(Kurichi)
39. Black Kite(Kurichi)
40. Painted Stork(Kurichi)
41. Indian Pond Heron(Kurichi)
42. Cattle Egret(Kurichi)
43. Purple Heron(Kurichi)
44. Grey Heron(Kurichi)
45. Little Cormorant(Kurichi)
மேலும் பார்க்க

Wednesday 6 February 2013

நான் நட்டு மரமான மரத்தில்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
நான் நட்டு மரமான மரத்தில் பறவைகள்
நிழல் தேடி அமர்ந்து இருப்பதை ,
காணும் போது யாகசகர்களுக்கு நிழல்கூடம் கட்டியதை போல உணர்கிறேன் !
சிறு குழந்தைகள் அதில் மலர் பறிக்கும் போது இறைவனை அலங்கரிக்கப்போவதை உணர்கிறேன் !
செம்பூத்து பறவை ஊரில் இருக்கும் பறவைகளுக்கு உரக்கச் சொல்கிறது
இந்த மரம் பாதுகாப்பானது என்று !
மரம் நடுவது ஒரு விழா அல்ல - நாம் எல்லோரும் உணரவேண்டிய ஒரு உணர்வு
மரம் நடுவோம் , ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

ஆகாய விரும்பி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாலை குளிர்ச்சியான என் வீட்டு மொட்டை மாடியில்,
வானில் பிறை நிலா என்னை கனவுலோகம் அழைத்துச் சென்றது !
அதில் நட்சத்திரங்கள் பாடின,
சூரியன் வெப்பத்தில் தாண்டவம் ஆடினான் ,
மேகங்கள் என்னைத் தொட்டு போயின ,
காற்று என் உடலை முத்தமிட்டன ,
என் கண்கள் விழித்தன என் மேல் நின்ற நிலா என்னை பார்க்கிறது என்று ,
வெட்கமுடன் மீண்டும் கண்களை மூடினேன் !
# நாளை காலையில் புதிய விடியலைக் காண
ஆகாய விரும்பி
-உமேஷ் மருதாசலம்

இன்றைய விடியல் புதியது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாங்குயில் ஒன்று இன்று காலை என் வீட்டு மாமரத்தில் நின்று கூவியது ,
வால்காக்கை என நினைத்தேன் !!!
அதன் உடல் தங்கநிறத்தில் பொன்மேனி மின்னியது ,
வாழைப்பூவில் தேன் எடுக்க பூச்சிட்டு / தேன் சிட்டு வந்தது !
வாலாட்டிக் குருவி இரண்டு நீண்ட நேரம் கத்தியது ,
இன்று பறவைகள் இனிய விடியலை உணர்த்தியது என் ஜென்னல் அருகில்
இன்றைய விடியல் புதியது
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

சூரியன் மறைந்த இடம்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாசடைந்த நீரைப்பார்த்து சூரியன் சொன்னது , என்று உனக்கு பாவம் சுமக்கும் நோய் குணமாகும் என்று ?

சூரியன் மறைந்த இடம் : குறிச்சி குளம்

Wednesday 16 January 2013

வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்

Tuesday 15 January 2013

ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்

என்வீட்டு தோட்டத்தில் இது அறுவடை காலம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
என்வீட்டு தோட்டத்தில் இது அறுவடை காலம்
மஞ்சள் , துவறை ,
மஞ்சள் முதல் ரகம் : 06-கிலோ ,
மஞ்சள் இரண்டாம் ரகம் : 09 கிலோ ,
அவறை முதல் ரகம் : 12 கிலோ .
இனி காயவைத்து , அரைத்து எங்கள் குடும்பத்தினருக்கும் ,சுற்றத்தாருக்கும் ,நண்பர்களுக்கும் பகிர்வோம் !
மாடு இருக்கும் பட்டியினை சுத்தம் செய்து ,
மாட்டினை சுத்தம் செய்து இன்று
மாலை மாட்டுப்பொங்கலிட்டு தென்னந்தோப்பில் வணங்குகிறோம் !
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
~ கொங்கு செழித்தால் , எங்கும் செழிக்கும் ~

Monday 14 January 2013

தூமனூர் - சேம்புக்கரை மலை கிராமம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~

கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்(13-01-2013)
இடம் :தூமனூர் - சேம்புக்கரை மலை கிராமம்
திருப்பாவை - திருவெண்பாவை சுக்ரவார்பேட்டையில் காலையில் கோயிலில் கூவ ,
என் வாகனம் ஒரு சூழல் நண்பரை அழைத்து கொண்டு ஆனைகட்டி சாலையில் ஊர்ந்தது,
கடும் உறைபனியோ , என்னை மொய்க்க ,
சூரியன் கிழக்கே தலைதூக்கியது ,
மலைத்தொடரை ஏற தயாரானது என் கால்கள்,
பழம் பழுத்த ஆலமரத்தில் காட்டுப்பறவைகள் சங்கீதம் பாட ,
யானைகள் ,காட்டெருமைகள் , கடமான்கள் ,புள்ளிமான்கள் ,கரடி ,சிறுத்தை ,செந்நாய் ,மரநாய் ,கீரி சென்ற தடையங்கள் எங்கள் கவனத்தை ஈர்க்க
காட்டுக்கோழி எங்களின் வருகையை காடுமுழுவதும் கூவியது ,

மது பயன்பாடு வனபகுதிக்குள் ஆவனமாக தேவையற்ற வெளியாட்கள் நடமாட்டம் உறுதியானது ,
பிளாஸ்டிக் குப்பைகள் அங்கொன்றும் - இங்கொன்றும் வனபகுதியில் தென்பட,
தூமனூர் மலை கிராமம் அடைந்து கால்கள் ,
விடியல் காலையில் மது அருந்திய இரு-மலை மக்கள் எங்களை வரவேற்க,

சிறார்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் விளையாடும் சிறுவர்கள் எங்களை நலம் விசாரித்தனர் ,
நகரம் சென்று கல்லூரிபயிலும் மூவர் கிராமத்தை சுற்றிகாட்டினர் ,
ஊர் உருவான வரலாறு ,
தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து உரையாடினோம் ,

விவசாயம் செய்ய மழையில்லை (மக்கள் இல்லை),
புற்கள் கூட தலைத்தூக்க முன்வரவில்லை,
குடிக்க கூட குட்டையில் நீர் தேங்கி நிற்கவில்லை ,
சிட்டுக்குருவிகள் "பால்வாடி" பள்ளியில் பாடம் கற்க,
கைக்குழந்தைகள் விளையாட ஒரு பொம்மை இல்லை ,

அங்கொன்றும் , இங்கொன்றும் காணப்பட்ட வெள்ளை மேகங்கள் ,
எங்களை சேம்புக்கரையில் சேர்த்தது ,
தீயில் கருகிய மூங்கில் மரங்கள் ,
வானத்தில் பறந்து எங்களை நோட்டமிட்ட கருங்கழுகு ,
குளிர் காற்றில் சிறகடித்த மலைப்பறவைகள் ,
நீரின்றி வெடித்த ஓடைகள் / குட்டைகள் ,
ஜீப்பின் மேலே வெளியே தொங்கியபடி மலைமக்களுடன் கரடு முரடான பாதைகளில் ஆனைகட்டி பயணம் ,
உச்சிவெயிலின் தாக்கம் அதிகரிக்க பசியுடன் கோவைநோக்கி நகர்ந்தது என் பயணம் !
Bird Watching @ Anaikatti Tribal Settlement:
1. Black Headed Munia
2. House Sparrow
3. Oriental white Eye
4. Purple Sunbird
5. Loten’s Sunbird
6. Purple-Rumped Sunbird
7. Large Pied Wagtail
8. Yellow Wagtail
9. Forest Wagtail
10. Indian Robin
11. Pied Bush Chat
12. Oriental Magpie Robin
13. Ashy Prinia
14. Common Tailor Bird
15. Asian Paradise Flycatcher
16. Jungle Babbler
17. Rufous-Bellied Babbler
18. White-Browed Bulbul
19. Red-Whiskered Bulbul
20. Red-vented Bulbul
21. Jerdon’s Leaf Bird
22. Common Iora
23. Small Minivet
24. Jungle Crow
25. House Crow
26. Indian Treepie
27. Common Hill Myna
28. Jungle Myna
29. Common Myna
30. Brahminy Starling
31. Rosy Starling
32. Bronzed Drongo
33. White-Bellied Drongo
34. Greater Racket Tailed Drongo
35. Black Drongo
36. Black-Headed Oriole
37. Eurasian Golden Oriole
38. Brown Shrike
39. House Swallow
40. White Cheeked Barbet
41. Crimson-Throated Barbet
42. CopperSmith Barbet
43. Common Hoopoe
44. Indian Roller
45. Chestnut-Headed Bee-Eater
46. White-Breasted Kingfisher
47. Spotted Owlet
48. Greater Coucal
49. Small Green-Billed Malkoha
50. Asian Koel
51. Malabar Parakeet
52. Rose-Ringed Parakeet
53. Spotted Dove
54. Little Brown Dove
55. Blue Rock Pigeon
56. Red-Wattled Lapwing
57. Grey Jungle Fowl
58. Indian Pea Fowl
59. Common Kestrel
60. Black Eagle
61. Black Kite
62. Shikra
63. Cattle Egret
64. Indian Pond Heron

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா? புதியதலைமுறையின் புலனாய்வு

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா?
புதியதலைமுறையின் புலனாய்வு

கோயமுத்தூர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. இது குறித்து புதிய தலைமுறை நடத்திய புலனாய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டும் மட்டும் 800 முறை யானைகள் காட்டைவிட்டு வெளியே வந்திருக்கின்றன. 20 பேர் யானை தாக்கி இறந்திருக்கிறார்கள். 17 யானைகள் மின்சார வேலிகள், ரயில் பாதைகள் ஆகிவற்றில் சிக்கி பலியாகியிருக்கின்றன. இந்த மோதல்கள் அனைவராலும் பேசப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தனியார் அமைப்புகள் போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை வனப்பகுதியை ஒட்டி கட்டியுள்ளது இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று வனத்துறை தெரிவிக்கிறது.

விதிமுறை மீறிய ஈஷா?: இக்கரை போளுவாம்பட்டி காப்புக்காடுகளை ஓட்டி அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் மனநல மேம்பாடு குறித்த சேவையை கடந்த 30 ஆண்டுகளாக செய்துவருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான யோகா விரும்பிகளை ஈர்க்கும் இந்த மையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். 113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது என்கிறது வனத்துறையின் ஆவணங்கள். இதன் காரணமாகவே யானைகள் அடிக்கடி காட்டைவிட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்திவருகிறது என்கிறது வனத்துறையின் அறிக்கை.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் என அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம். இப்போது ஈஷா யோகா மையத்தின் விதிமுறை மீறல்களை முதலில் பார்ப்போம்.

ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடம் மலையிடப் பாதுகாப்பு குழுவின் கீழ் வரும் பகுதி. இந்த வன எல்லையை ஒட்டி கட்டடங்கள் கட்ட தொடங்குவதற்கு முன்பாகவே மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 69 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்களை ஈஷா யோகா மையம் இதுவரை வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில், கட்டிடங்களுக்கு போளுவாம்பட்டி ஊராட்சியிடம் உரிய அனுமதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாயிரம் சதுர அடிக்குமட்டும்தான் ஊராட்சி அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கும் ஊராட்சி தலைவர் சதானந்தம், யானைகள் தொல்லை அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கிறார்.

ஈஷாவின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் காடுகளைவிட்டு வெளியே வருதாக வனத்துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த நரசீபுரம் ஊராட்சி தலைவர் முரளியும் உறுதிப்படுத்துகிறார்.

இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில் தங்களது நடவடிக்கைகளால் வனத்திற்கும், யானைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அமைப்புகளை மதிக்காத ஈஷா? ஈஷா அமைப்பு கட்டியுள்ள 60 கட்டடங்களும், கட்டிவரும் 34 கட்டுமான பணிகளுக்கும் உரிய அனுமதியளிக்க கோரி நகர் ஊரமைப்புதுறைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறது. அனைத்து கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நகர் ஊரமைப்புதுறை உத்தரவிட்டது. ஆனால் அதை ஈஷா யோகா மையம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நகர் ஊரமைப்புதுறை நிறுத்த கடிதத்திற்கு பிறகு சூர்ய குண்டம் என்ற கட்டுமானத்தை நிறுவி அதை டிசம்பர் 22 ஆம் தேதி செயல்பாட்டிற்கு திறந்திருக்கிறது ஈஷா யோகா மையம். இது குறித்து கேட்டதற்கு நகர் ஊரமைப்புதுறையின் கடிதத்தை மதித்து கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டதாக ஈஷா யோகா மையம் விளக்கமளிக்கிறது. இன்னும் கட்டுமானப்பணிகளை தொடர்வதால், அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றப்போவதாக டிசம்பர் 24ஆம் தேதி இறுதி கடிதம் ஒன்றை ஈஷாவிற்கு, நகர் ஊரமைப்புத்துறை அனுப்பியிருக்கிறது.

இண்டஸ் கல்லூரியின் விதிமீறல்கள்: இதேபோல், கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ளது இண்டஸ் பொறியியல் கல்லூரியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இண்டஸின் சுற்றுச்சுவர், முன்பக்க நுழைவு வாயில் ஆகியவை வன எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
வனப்பகுதியை ஒட்டி 150 மீட்டர் buffer zone ஏன் விட வேண்டும் என்ற கேள்வி எழலாம். யானைகள் உயரமாக இருக்கும் பாறைகள் மீது ஏறுவதில்லை. வலசைக்கு சமதளம் தேவைப்படுகிறது. நீங்கள் பார்க்கும் இந்த பகுதியைப் போல் ஆக்கிரமிப்புகள் தொடரும் வரையில் யானை-மனித மோதல்கள் ஓயப்போவதில்லை.

ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கும் இண்டஸ் கல்லூரி நிர்வாகம் இதுவரை முக்கியமான துறைகளான வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை என்று அரசு துறைகளின் ஆவணங்கள் உறுதியாகச் சொல்கின்றன. இந்த கட்டடங்களை இடிக்கச்சொல்லி ஒரு நோட்டிசை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருகிறது ஆலந்துறை பேரூராட்சி.

விதிகளுக்கு புறம்பாக தாமரா ரிசார்ட்ஸ்?கோவையின் பிரபலமான பிரிக்கால் நிறுவனத்தினரால் நடத்தப்பட்டுவரும் தாமரா விடுதியின் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. பேரூராட்சி, நகர் ஊரமைப்புதுறை, வனத்துறை, என எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் தாமிரா விடுதி கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட பொது சம்பந்த துறைகளிடம் அனுமதிக்கு விண்ணபித்திருக்கிறோம் என்றார்.

உயரமான சுற்றுச்சுவர் அமைக்கலாமா?:மத்துவராயபுரம் நெல்லூர் வயலில் அமைந்திருக்கும், சின்மையா சர்வதேச உரைவிடப் பள்ளி மீதும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிகளை புறக்கணித்துவிட்டு, சமீபத்தில் வன எல்லையை ஒட்டியே சின்மையா நிறுவனம் உயரமான சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது. அதேபோல் அனுமதியின்றி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த விதிமுறை மீறல்கள் குறித்து விளக்கம் கேட்டதற்கு பதில் இல்லை.

விதிகளை மீறிய அமிர்தானந்தாமயி?: மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற்றுள்ள மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனமும் விதிகளை கடைபிடிக்கவில்லை. வனத்துறை தடையில்லாச் சான்று வழங்கும் பொது வன எல்லையிலிருந்து 150 மீட்டர் நீளத்திற்கு எவ்வித கட்டடிடமும், வேலியும் அமைக்க கூடாது என்ற நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், வன எல்லையை ஒட்டியே அமிர்தாமயி நிறுவனம் மின்வேலி அமைத்திருக்கிறது. அதேபோல், அந்தப்பகுதியில் நீர் நிலைகளையும் காக்க தவறி இருக்கிறது. இது குறித்து அமிர்தனந்தாமயி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.

யானைகளை விரட்டும் ஆபத்தான பணி:காட்டிலிருந்து வெளியே வரும் யானைகளை விரட்டும் பணி மிகவும் ஆபத்தானது. கோவைப்பகுதியில் தினமும் காட்டைவிட்டு வெளியே வந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட யானைகள் பாதுகாப்பு படையினருடன் புதிய தலைமுறை செய்திக்குழுவினர் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை இப்போது பார்க்கலாம். கோவை வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் ஆயிரக்கணக்கான யானைகள் காட்டைவிட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவருகிறன. 20 யானைகள் காட்டைவிட்டு வெளி வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தற்போது தகவல் வந்திருக்கிறது.

கோவையில் தனியார் ஆக்கிரமிப்புகளை பார்த்து கோபப்படும் யானைகள் குடியிருப்புகள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. அப்படி 8 யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்திருக்கின்றன. அவைகளை வனத்துறையினர் பட்டாசு விட்டு விரட்டுவதை நேரடியாக பார்க்கலாம். வனத்துறையிருக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் தூங்கத இரவுகளாக இருக்கின்றன. தனியார் ஆக்கிரமிப்புகளால் யானைகள் வெளிவருகின்றன.

இதனால் மனித விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.

பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? :பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டங்களைக் கட்டினால் அவற்றை தடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுசூழல்துறை, நகர் ஊரமைப்புத்துறை இப்படி பல அமைப்புகள் இருந்தாலும், அனுமதியில்லாத கட்டடங்களை முறைப்படுத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை என்கிறார் இந்த முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களை சேகரித்த பொதுநல ஆர்வலர் சிவா.

மலைதள பாதுகாப்புக்குழு என்ன செய்கிறது?:2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட மலை தாலுக்காக்களில் கட்டடப்பணிகள் தொடங்க மலைதள பாதுகாப்புக்குழு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த குழு கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வேலையைமட்டும் செய்கிறது. சுற்றுச்சூழல் குறித்த பார்வை இதற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியருக்கு என்ன பொறுப்பு?: மலைதள பாதுகாப்புக்குழு கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் இருக்கிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக கோவை மாவட்டத்தில் எழும்பியிருக்கும் கட்டடங்கள் குறித்து தமக்கு தெரியவரவில்லை என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர்.

வனப்பகுதிகள் பாதுகாக்கப்படும்: இது குறித்து மலைதளக்குழுவின் தலைவரும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலரிடம் கேட்டபோது, நகர் ஊரமைப்புத்துறை சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை கண்காணித்து அகற்றிவருவதாக தெரிவித்தார். வனப்பகுதிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அந்த துறை தெரிவித்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

காணொளி: http://puthiyathalaimurai.tv/index.php/video-gallery?video=826

Friday 11 January 2013

இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
வானில் வட்டமிட்டு பறக்கும் கரும்பருந்து எழுப்பும் சப்தம் எதை உணர்த்துகிறது ?
பறவை கூடு மறைத்த இலைகள் எல்லாம் இன்று சுட்டெரியும் வெயிலில் காய்ந்து-உதிர்ந்து போனது ,
நீர் தாங்கிய குளங்களில் எல்லாம் இன்று
கோழி கழிவுகள் ரத்த வெறி பிடித்த நாய்கள் என்னை அச்சுறுத்துகின்றன ,
மாடப்புறாக்கள் என் வீட்டு மாடியில் தானியங்களை உண்ண ,
அன்று மரம் நிறைந்த சாலைகளோ இன்று
தலையற்று நிற்கின்றன ,
சுவாசிக்க சுத்தமான காற்றில்லை ,
உண்ண ஆரோகியமான உணவில்லை ,
இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!
-வாழ்வின் உரிமை தேடி
உமேஷ் மருதாசலம்
 

என்று தனியும் தமிழரின் நீர்த்தாகம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
தமிழகத்தில் விவசாயி வறட்சியால் தற்கொலை செய்வதையும் , 
யானை தாக்கி இறந்து போவதையும்
தமிழக அரசு நிவாரண நிதி என "லஞ்சம்" கொடுத்து பிரச்சனையை மூடி மறைத்து விடுகிறது !
## என்று தனியும் தமிழரின் நீர்த்தாகம்
கண்ணீருடன்
-உமேஷ் மருதாசலம்

நலம் வாழ - குளம் காக்க

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
சின்ன(பிஞ்சு) மீன்கொத்தி ஒன்று குளத்தின் கரையில் உணவுக்காக அங்கும் இங்கும் பறந்தது ,
சின்னக் கொக்குகள் கூட்டமாக மீன் தேடிக்கொண்டிருந்தன ,
கருடப்பருந்து வானில் வட்டமிட்டது ,
நாய்கள் குளத்தில் நீந்தி வெயிலின் வெப்பம் தனித்தன ,
நீர் கோழிகள் கரையில் மெய்ந்தன !
மாசுபட்ட கறுப்புநிற குளம் நிறைந்த சாக்கடை / கழிவு நீரின் அருகில் நிற்கமுடியவில்லை 
நாற்றம் குமட்டுகிறது ,
பேருந்து நிலையம் கட்ட குளம் மூடப்பட்டு வருகிறது, மாநகராட்சியும் குளத்தினை மக்கள் பங்களிப்புடன் மூட ஊக்கம் படுத்துகிறது ,
வாகனங்கள் இரைச்சலை உண்டாக்க நீர்பறவைகள் நிம்மதியான இடம் தேடி பறந்து சென்றன ,
நீரற்ற குளத்தினை கண்டு சூரியனும் சிவப்பு முகத்துடன் மேற்கு வானில் கோபமாய் மறைந்தான் !
நலம் வாழ - குளம் காக்க 
உமேஷ் மருதாசலம்

என் வீட்டு பறவைகள்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
என் வீட்டு மாடியில் அமர்ந்திருந்த என் கண்களுக்கு விருந்தளித்த,
என் வீட்டு பறவைகள்
என் வீட்டை சுற்றி இத்தனை பறவைகளா ?
Bird Watching in House (07-01-2012)
1..தினைக்குருவி Muniya
2.சிட்டுக்குருவி House Sparrow
3.தேன் சிட்டு Sunbird
4.குளத்து குருவி White Browed Wagtail
5.தையல் சிட்டுTailor Bird
6.கதிர்குருவி Ashy Prinia
7.நல்ல காக்கா Crow
8.வால் காக்கை IndianTreepie
9.நாஹணவாய் Myna
10.கரிச்சான் குருவி Black Drongo
11.மாங்குயில் Golden Oriole
12.தம்படி குருவி Swallow
13.சின்ன குக்குறவன் CM Barbet
14.பனங்காடை Indian Roller
15.சவல் குருவி Hoopoe
16.மீன்கொத்தி WB Kingfisher
17.குயில் Asian Koel
18.கிளி RR parakeet
19.மாட புறா BR Pigeon
20.மயில் Peofowl
21.நீர் கோழி Water Hen
22.கறும் பருந்து Black Kite
23.வெள்ளை கொக்கு Medium Egret
24.உன்னி கொக்கு Cattle Egret
25.குளத்து கொக்கு Indian Pond Heron
26.நீர் காகம் Cormorant
 

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: நிரந்தர தீர்வு எப்போது?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: நிரந்தர தீர்வு எப்போது? 
தமிழகத்தில் அதிக அளவு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஒன்று கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி.

காலப்போக்கில் யானைகளின் வழித் தடங்களில் கல்வி நிறுவனங்களும், ஆசிரமங்களும் கட்டப்பட்டதால், அவை தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டதாக மலைகிராம மக்கள் கூறுகின்றனர். யானைகள் பாரம்பரியமாய் பயன்படுத்திய பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதில், சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர் வனத்துறையினர்.

வேறு வழியின்றி மலைகிராங்களுக்குள் வரும் காட்டு யானைகள் கண்ணில் படுபவர்களையெல்லாம் தாக்குவதாக கூறுகின்றனர் பாதிப்புக்குள்ளாகும் மக்கள். கோவை, பெரியநாயக்கன் வனச் சரகங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதும், பிறகு வனத்துறையினர் அவற்றை விரட்டுவதும் வாடிக்கையான நிகழ்வாக இங்கு மாறி உள்ளது. இனியும் தாமதிக்காமல் இந்த பிரச்னைக்கு அரசு நிர்வாகம் விரைவான தீர்வினை காண வேண்டும் என்கின்றனர் மலைவாழ் கிராம மக்கள்.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுப்பதற்காக, யானைகள் தடுப்பு அகழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

நிரந்தர தீர்வு எப்போது? மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதற்கு, வனங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதும், ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், விலை மதிப்பதற்ற மனித உயிர்கள் பலியாவதை யாரும் தடுக்க இயலாது.