Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Monday 19 January 2015

அனைவருக்கும் கல்வி அவசியம்

அரசுப்பள்ளியில் இன்று ஆறு , ஏழு , எட்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் . . .
பொங்கல் பண்டிகையில் ஒவ்வொருவரின் கொண்டாட்டங்களை சுவையாக பகிர்ந்தனர் ,
சரி இது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு மாணவியிடம் உனது பெயரை கரும்பலகையில்" தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுத்து என சுண்ணக்கட்டியினை கையில் தந்தேன் , , , எனக்கு எழுத-படிக்க தெரியாது என தயங்கினால் . . .
அடுத்து இன்னொரு மாணவனை எழுதக்கூறினேன் , தமிழில் தனது பெயரை எழுத்துப்பிழைகளுடன் தவறாக எழுதினான் பரவாயில்லை ஆங்கிலத்திலாவது எழுது தம்பி என வாய்ப்பு தந்தேன் தெரியாது என சென்று அமர்ந்துகொண்டான் , , ,
அறுவது மாணவர்கள் படிக்கும் வகுப்பில் பத்துக்கும் குறைந்த மாணவர்கள்தான் சரளமாக எழுத படிக்க இயல்கிறது . . .
வருத்தமாகத்தான் இருந்தது அது சரி , எழுத்து அறிவும் ? படிப்பறிவும் ? நமக்கு தேவைதானா ? என அவர்களிடம் கேட்டேன் . . . "வேண்டவே வேண்டாம்" என சந்தோசமாக உரக்கக்குரல்கள் எழும்பின . . .
செய்தித்தாள் படிப்பீர்களா ? செய்திகளை கேட்பீர்களா ?
ஆம் , கொலை / கொள்ளை கடத்தல் நடிகரின் பேட்டி என பதில் வந்தது , ஏன் ? வேறு செய்திகள் தேடித்பார்த்தோம் இல்லை என்றனர் ???
ஆறு 6, ஏழு 7, எட்டு 8, ஒன்பது 9 ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்கள் நாடு முழுவதும் பரவலாக இப்படிதான் இருகின்றனர் என எங்களது ஆய்வு முடிவு கூறுகிறது .
# எனது பார்வையில் அரசுப்பள்ளியில் 95% சதவீதம் குழந்தைகள் இலவச மதிய உணவு திட்டத்தில் ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே ! ! !
இலவச சீருடை , புத்தகம் , காலணி , நிழலில் இருக்க ஒரு கூரை அறை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் , கூலி வேலையில் இருந்து தற்காலிகமாக தப்பிகின்றோம் என ஆறுதலுக்காக பள்ளியில் அடைக்கலம் நாடும் பிஞ்சு விரல்கள் . . .  இதற்கு ஆசிரியரை குறை கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் , பரவலாக அரசுப்பள்ளியில் அதிக எண்ணிகையில் சராசரியாக 1:80 மாணவர்கள் ஒரு வகுப்பில் இருக்கின்றனர் , ஒரு ஆசிரியறினால் எப்படி சிறப்பு கவனம் செலுத்த முடியும் ? கல்வியாளர்கள் 1 ஆசிரியர் : 30 என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது , பல மாணவர்கள் பள்ளிகளில் ஓட்டை சுவர் , துருப்பிடித்த மேஜை , சுகாதாரமற்ற வகுப்பறை / கழிவறை , அடிப்படை வசதிகள் இல்லாதது ,,, தொடர்ந்து குறும்புகள் செய்யும் குழந்தைகளை கண்டிக்கவோ அடிக்கவோ அல்லது சிறுதண்டனைகளையோ மாணவர்களுக்கு கூற முடியாது , கொஞ்சம் கண்டித்தால் கூட மாணவர்கள் காவல்துறையிடம் / பொறுப்பு அதிகாரியிடம் வன்கொடுமை / தாக்குதல்கள் என சமூகம் விஷமிகளை அவதூறாக பரப்புகிறது ஒரு கூட்டம் . . .
வகுப்பறைகள்/விளையாட்டுகூடம் கூட இல்லாத பள்ளிகளை அந்த அந்த மாவட்ட நிர்வாகம் கவனிக்காத ? மேலும் மாணவர்களின் அளவினைப்பொருத்து ஆசிரியர்களை நியமிப்பது போன்ற நிர்வாக இடைவெளியினை கல்வித்துறை குழு கண்டறிந்து நிவர்த்திசெய்யவேண்டும் , , , இப்படி பலவற்றை விவாதிக்கலாம் . . . 
^ இன்னும் எனது பார்வையில் இன்றைய பள்ளிகளில் மாணவர்களின் நிலைமை என சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன் . . .
# அனைவருக்கும் கல்வி அவசியம் #
copyrights @ umeshmarudhu-2015 ~Save Nature For Future~

Thursday 2 January 2014

Voice of Kurichi Lake/People has been listened by Tamilnadu Pollution Control Board

Voice of Kurichi Lake/People has been listened by District Environmental Engineer of Tamilnadu Pollution Control Board has accepted our Petition & forwarded to readdress the grievance of petitioner & a copy submitted to
Special officer C.M....Cell, Secretariat,Chennai,
Member Secretary, TNPC Board,Chennai,
District Collector,Coimbatore,
Commissioner ,Coimbatore Corporation.
# Lets wait & watch,what's going to happen ?
~Kurichi Lake Lovers~


 

copyrights @ umeshmarudhu-2014
~Save Nature For Future~

Tuesday 31 December 2013

மண்ணுக்கு உரமானாவர்

இந்த நூற்றாண்டின் மாமனிதர் நம்மாழ்வார் ஐயா அவர்களை நாம் இழந்து விட்டோம் என்பது இந்த பிறவியில் நான் கேட்ட துயரமான தகவல்.
# ஐயா நீங்கள் ஆலமரம் போல மண்ணுக்கும் , உலகுக்கும் அர்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர்.
~உங்கள் உழைப்புக்கு நாடு தலைவணங்கும்,...உங்கள் முழக்கமான தமிழ் மண் வளத்தைக்காப்போம் தொடர்ந்து~அவரது கல்லறையில் சிமெண்ட் கோயில் கட்டிவிடாதீர்கள்,
அவர் பூஉலகில் உரமாக ,விதையாக ,பூக்களாக பூத்து மண்வளம் காக்க மண்ணுக்கு உரமானாவர்.
அவரின் மறைவு என்பது போராட்டத்தின் உச்சக்கட்டம் இயற்கையின் குலம் காக்க 75 வருடம் வேர்ஊன்றிய பூமித்தாயின் மகன் நம்ஆழ்வார் இன்று உரமானார்.மார்கழி திங்களில் திரு.நம்மாழ்வார் வைகுண்ட பதவி பெற்றார். இப்பூவுலகில் வாழ்ந்த இவர் சொர்கவாசல் சேர்ந்தார்.
# உங்களுடன் மாணவன் இவன்
உமேஷ் மருதாசலம்
30-12-2013

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Monday 16 December 2013

சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை

கொள்ளைப்பாதை:"சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை"என்னும் தலைப்பில் ஆராய்ச்சியாளர் திரு.விஜய் குமார் ,அவர்கள் கோவையில் திரு.வானவராயர் அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.அன்று ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் நமது பாரம்பரிய சின்னங்களை இழந்துவிட்டோம் என்று நம் யாவருக்கும் தெரியும்.இன்றும் அவ்வப்போது செய்திகளில்
கல்,தங்கம் ,வெள்ளி ,செம்புகளாலான சிற்பங்கள்
கைப்பற்றப்பட்டன என்னும் செய்திகளை படிப்பதுண்டு.
அவையாவும் நமது நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளகண்காட்சிகளில்,மாளிகைகளில்,
அருங்காட்சியகத்தில்,கலைக்கூடங்களில் கண்ணாடி பெட்டிக்குள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளன....
உலகஅளவில் செயல்பட்டு வரும் சில கொள்ளையர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்களை நாடு கடத்தி விற்பனை செய்கின்றன.பல ஆலயங்களில் உண்மையான சிலைகளுக்கு பதிலாக போலியானைவை மாற்றி அமைக்கப்படுகின்றன.பெரும்பாலும் சிவ பெருமானின் நடராஜர்சிலைகள் ,முருகன் ,விநாயகர்,காளி,புத்தர்,சிலைகள்
விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தம் ,சுத்தமல்லி ஆலயங்களில் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் மூலம் தான் கண்டறிந்ததை ஆவணத்துடன் விளக்கிக்கூறினார்.ஆஸ்திரேலியா,அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர் மேலும் பல நாடுகளில் சிலைகள் காட்சிப்பொருளாக உரிய ஆவணத்துடன் போலியான முறையில் இருப்பதை ஆவணப்படுத்தினார்.
அவர் ,இப்படி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தில் மட்டும் 15,000 கோவில்களை அடையாளம் கொண்டுள்ளார்."இன்றுவரை நாம் இழந்து போனது இருக்கட்டும் இனியாவது இருப்பதை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கினார்".
அவர் அவர் ஊரின் அருகில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
திரு,விஜய் அவர்களின் நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக இருந்தாலும் அது அரங்கம் நிரம்பிய கூட்டத்துக்கு வாழ்நாளில் மறக்கமுடியாதது.
# இத்தகைய நிகழ்வு நமது கோவையில் நிகழ சூழ்நிலை அமைத்து தந்த "திரு.சங்கர் வானவராயர்" அவர்களுக்கு மண்ணின் மக்களின் நன்றிகள்.
இருளில் நிகளும் திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் ஆய்வுகள் செய்தியாக மட்டும் இல்லாமல் தீர்வுகளுக்கு வழி செய்பவை.
# பாரம்பரியத்தை மீட்டுக்கொண்டு வர ,இங்கு இருப்பதை பாதுகாக்க தேசத்தின் உரிமையினை மீண்டுஎடுக்க போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஒன்று பட்டு போராடுவோம்~வெல்வோம்~
https://www.facebook.com/photo.php?fbid=681134115241610&l=6a3fc14b5a

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

Monday 25 November 2013

லாரி-லாரியாக பிளாஸ்டிக் குப்பைகள்


Tonnes of Hazardous Plastic Waste from Truck Dumped in Noyyal river Kurichi Wetland Coimbatore லாரி-லாரியாக பிளாஸ்டிக் குப்பைகள் /கட்டிடகழிவு மண்களை குறிச்சி குளத்தின் கரையில் கொட்டியவர்களை கண்டுக்கொள்ளாமல் ஆதரிகிறதோ/வேடிக்கை பார்க்கிறதா கோவை அரசு.
குறிச்சிக்குளம் குப்பை மேடாகி விட்டது.குளத்தை தூருவாருகிறோம் என்னும் பெயரில் ஒரு கூட்டம் கிணறு தோண்டிவிட்டு சென்றுள்ளது.பல இடங்களில் கரைகள் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பில் மூழ்கி உள்ளது.
குறிச்சி/குனியமுத்தூர் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக 13 பெரிய குழாய் மூலம் குளத்தினுள் பாய்ந்து வருகிறது.
இப்போதைய நிலையில் குறிச்சி குளம் பாலைவனமாக காட்சி தருகிறது.கண்ணுக்கு கண்ணீரைப்போல ஒரு துளி நீர் கூட இல்லை.குளத்தினை மூடி பேருந்து நிலையம் அமைக்கும் ஆயுத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
7-மதகுகள் மண்கொட்டி மூடப்பட்டு இருந்த தடையம் தெரியாமல் உள்ளது.
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு கரையில் உடைந்து காணப்படுகிறது.
கோவையில் அரசுத்துறை சரிவர இயங்குவதால் தான் குளங்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.அரசுத்துறையை குறை கூறும் முன் நம்மைப்போன்ற பொது மக்கள் தான் உணர்ந்து தாமாக முன்வந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.குறிச்சி குளத்தை சுற்றி சமீக காலங்களில் எல்லைகடந்த ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து கொண்டே வருகின்றன,இது முன்றிலும் குளத்தின் நலனுக்கு கெடுதல் தரும் செயலாக மாறி வருகிறது.உடனடி போர்கால அடிப்படையில் அரசும்/மக்களும் இயங்கினால் மட்டுமே குறிச்சி குளத்தினை பாதுக்காக்க முடியும்.
கடந்த மாதத்தில் பெய்த மழையில் கோவையில் உள்ள எல்லா குளங்களுக்கும் நீர் சென்று நிரம்பிய நிலையில் குறிச்சி குளதிக்கு ஒரு துளி நீர் கூட வந்து சேரவில்லை காரணம் எல்லை கடந்த ஆக்கிரமிப்புகள்.
நீர் துளிகூட இல்லாத குளத்தினைக் காணும் போது எங்கள் தலை சுற்றுகிறது நாளை இந்த குளம் ரியல் எஸ்டேட் வீட்டுமனை ஆகிவிடக்கூடாது என்பதுதான் .
ஒன்று கூடி குறிச்சி குளம் பாதுகாப்போம்
நொய்யல் நதி பாய இடமில்லாமல் தவிக்கிறது
குறிச்சிப்பாலைவனத்தில் இவன்
உமேஷ் மருதாசலம்
25-11-2013

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

Sunday 17 November 2013

Birdwatching in Singanallur Wetland/Lake

Birdwatching in Singanallur Wetland/Lake:
1.Little Grebe
2.Little Cormorant
3.Darter
4.Spot Billed Pelican
5.Indian Shag
6.Large Egret
7.Purple Heron
8.Grey Heron
9.Indian Pond Heron
10.Cattle Egret
11.Median Egret
12.Little Egret
13.Painted Stork
14.Spot-Billed Duck
15.Black Kite
16.Brahminy Kite
17.Grey Francolin
18.Indian Peafowl
19.Common Moorhen
20.Purple Moorhen
21.Common Coot
22.Red-Wattled lapwing
23.Wood Sandpiper
24.Blue Rock Pigeon
25.Eurasian Collared Dove
26.Spotted Dove
27.Little Brown Dove
28.Rose Ringed Parakeet
29.Asian Koel
30Greater Coucal
31.House Swift
32.Asian Palm Swift
33.Small Blue Kingfisher
34.White-Breasted Kingfisher
35.Chestnut-Headed Bee-Eater
36.Blue-Tailed Bee-Eater
37.Indian Roller
38.Common Hoopoe
39.Copper Smith Barbet
40.Lesser Golden-Backet Woodpecker
41.Bush Lark
42.Red-Rumped Swallow
43.Born Swallow
44.Black Drongo
45.Rosy Starling
46.Common Myna
47.House Crow
48.Jungle Crow
49.Red-Vented Bulbul
50.Babbler
51.Ashy Prinia
52.Common Tailorbird
53.Paddy Field Warbler
54.Common Stone Chat
55.White Browed Wagtail
56.Purple Rumped Sunbird
57.Purple Sunbird
58.Spotted Munia
59.Black Headed Munia
60.WHite-Rumped Munia
(Umesh Marudhachalam)
Venue : Singanallur Kulatheri Bus Stop/Boat House,
 Date : 17-11-2013
 Time :05.45 A.m to 10.00 A.m,
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Monday 4 November 2013

ஆஹா இது அதிசயம்

ஆஹா இது அதிசயம் !!!
யானைகளின் மீது எல்லை கடந்த காதலும் ,அவைகளின் நலனில் அக்கறையும் கொண்டவர்கள் தான் இதுபோன்ற ஆவணப்படங்களை எடுக்க முடியும். யானை ஒரு பெரிய உருவம் கொண்ட உயரினம் என்பதைகடந்து யானை பிற உயிரினங்களின் மீது வைத்துள்ள பாசம்/புரிந்துணர்வுகளை இந்த சிறுப்படம் ஆவணப்படுத்தி உள்ளது. இந்த படம் எடுத்த இவர் பாஸ்கரன் அண்ணன் கோவை மாவட்டத்தில் ஏற்படும் மனித யானை மோதல்களுக்கு காரணங்களை கள அனுபவங்களின் மூலம் பேரறிவு பெற்றவர்.இவர் படங்கள் பலரை யானைமீது காதல் கொள்ள வைத்துள்ளது(நான் உட்பட).பல இளைஞர்களுக்கு இவர் வழிகாட்டியாக உள்ளார். யானைகள் நலன் வாழ - மனித-யானை மோதல்கள் தீர்வு காண இவர் ஆவணப்படம்/குறும்படம் எடுக்க எங்களைப்போன்ற சுற்றுசூழல் ஆர்வளர்கள்:வன விரும்பிகள் துணைநிட்போம்.
இவன் தாளியூர் ஜஸ்டின் விரும்பி,
உமேஷ் மருதாசலம்
04-11-2013
<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/ta_IN/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script>
<div class="fb-post" data-href="https://www.facebook.com/photo.php?v=613159365389966" data-width="550"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/photo.php?v=613159365389966">இடுகையிடு</a> by <a href="https://www.facebook.com/baskaran.tts">Baskaran Tts</a>.</div></div>

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Saturday 2 November 2013

காட்டினிலே தினமும் தீபாவளிதான்

காட்டினிலே தினமும் தீபாவளிதான் :
யானை வழித்தடம் ஆக்கிரமித்து வீடு ,தோட்டம் , ஆஸ்ரம் கட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் ஓவ்வொரு ஜீவனுக்கும் 365தினமும் மிரட்டும் தீபாவளிதான்.காடுகளை சுற்றி பட்டாசு சப்தங்கள் தினமும் எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கும்.ஆதி கால மனிதன் நெருப்பினைக்கண்டு பயந்ததைப்போல இன்றும் வன விலங்குகள் பயந்து கொண்டுதான் இருக்கின்றன.அது பயப்படுவதால் தான் மனிதன் தலைகனம் கொண்டு எதிர்த்து திரிகின்றான்.
(சாது மிராண்டா?).
# மர உச்சியில் கூடு கட்டி வாழ்கின்ற பறவைகள் பெரும் புகைகளால் இப்போது மூச்சு முட்டி என்ன ஆகியிருக்குமோ ?
நாளை காலை ஆராய்ந்து பார்ப்போம் !
~தீபஒளி/ஒலி இரவில்~இவன்
உமேஷ் மருதாசலம்
01-11-2013
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Sunday 27 October 2013

விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம்

இன்று என் திட்டங்கள் எல்லாம் மாறிப்போனது காரணம் :
காலை பறவைப்பார்த்தல் நிகழ்வுக்கு சென்ற போது வேப்பமரத்தின் நிழலில் உறங்கிக்கிடந்த விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம் .இரவு முதல் விடியல் காலை நான்கு மணிவரை யானைக்கூட்டம் தனது தக்காளி நிலத்தில் தங்கியதால் உறக்கமிலாத இரவாகிப்போனதை கூறினார்.பின்னர் யானைகள் தங்கிய தக்காளி பூமியினை சென்று நோட்டமிட்டேன் . கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.விவசாயி பலம...ுறை தொலைபேசியில் அழைத்தும் வனத்துறை வந்துசேரவில்லை.அங்கே வனவிலங்கு நீர் அருந்தும் நீர் தொட்டிகள் பராமரிப்பின்றி ,நீர் வரும் ஓடைகள் எல்லாம் தனியார் பல்கலைக்கழகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டேன்.
அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது .பின்னர் காலை உணவை அவர்களின் குடிசை வீட்டில் உண்டு விட்டு மேலும் அந்த பகுதிகளில் கள ஆய்வு செய்தேன். மதியம் வரை சுற்றிப்பார்த்ததில் ஒரே கருத்தாக யானைகளின் வழித்தடம் கல்லூரிகளாக ,ரியல் எஸ்டேட் என பல ஆக்கிரமிப்புகளால் உள்ளன . உடனடியாக வனதுறையினை சேர்ந்த உயர் அதிகாரியினை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் வனவிலங்குகளுக்கும் அப்பாவி விவசாயிகளுக்கும் சந்திக்கும் இன்னல்களைப்பற்றி கூறினேன்.சில நம்பிக்கை தீர்வுதரும் வார்த்தைகளை அவர் தந்தார். அப்பாட என மாலை வீடு திரும்பினே. பின் கோவையின் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் பறவை பார்க்க சந்திப்போம் என அலைபேசியில் அழைத்தார் உக்கடம் குளத்தின் கரையில் சந்தித்தோம். அங்கே கடல் போல செவ்வானம் விரிந்திருக்க குழந்தைகள் குளத்தில் நீந்தி விளையாடுவதை கண்டு மகிழ்தோம்.சிறுவர்களுடன் இணைந்து துண்டு விரித்து மீன் பிடித்தோம்.பெரிய பெரிய நீர் பறவைகள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன .உக்கடம் பேருந்து நிலையம் ஆவின் பாலகத்தில் சுவையான பாதம் பால் அருந்திவிட்டு தித்திப்பாய் நகரப்பேருந்தில் கடந்த வாரம் மரம் நட்ட இடங்களில் நீர் பாய்ச்சி விட்டு ,வீடு திரும்பினேன். இந்த நாளவழக்கத்திற்கு மாறாக இனிய நாளாக மாறியது.
ஞாயிறு பயணி இவன்
~உமேஷ் மருதாசலம்~

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Tuesday 12 February 2013

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,
பனைமரத்தின் ஓலைகள் காய்ந்து செத்து வீழ்ந்தன ,
வெத்தலை மென்னும் மூதாட்டியின் கண்கள் என் வருகையை உற்று நோக்க ,
நாச்சிப்பாளையம் என்னும் தக்காளி மண்டியில் ஆடுகள் சொத்தைப்ப...ழங்களை ருசிக்க ,
வழுக்குப்பாறை கிராமத்தில் மரங்கொத்தி என் கண்முன் நின்றது ,
சொக்கனூரில் செம்பூத்துப் பறவை என் வருகையை ஊருக்கு அறிவித்தது ,
முத்துக்கவுண்டனூர் பள்ளியில் மழலைகள் ஓடி விளையாட ,
அன்று கிளிகள் பறந்து-பறந்து பழம் உண்ட ஆலமரமோ இன்று ஒதுங்க கூட நிழலில்லை,
வாழ இடம் , உண்ண பழம் இல்லை ,
கொண்டைலாத்தி பறவை மரண ஓலம் இட்டது ,
புளியமரங்களில் மைனாக்கள் ருசி பார்க்க ,
பனங்காடை வெயிலில் தாகமாய் அலைய ,
என் முருகன் குடிகொண்ட பசுந்தலைகள் நிறைந்த முத்துமலையோ பாலை நிலமாக காட்சியளிக்க ,
தென்னை மரங்கள் தலையறுத்து தொங்கின ,
வேப்பமரங்கள் காய்ந்து கருகின ,
அரசமர விழுதில் கருங் காக்கைகளோ மெலிந்து சக்தியற்று அமர்ந்தன ,
மண்ணில் ஈரம் கொஞ்சம் கூட தலை காட்டவில்லை ,
விவசாயி உடல் மெலிந்து மழை வேண்டி நின்றான் ,
என் கண்களோ இவைகளைக் காண என்ன பாவம் செய்ததோ ?
மாரி அன்னை எமக்கு அன்ன பிரசாதம் ஊட்டினால் ,
புற்றிடத்தில் குடி கொண்ட சிவபெருமானோ சிவபுராணம் படிக்க வாய்ப்பு தந்தார் ,
ஆஞ்சநேயர் சுண்டல் பிரசாதம் ஊட்டினார் ,
அமாவாசை இரவோ இருளை பரப்ப ,
வீடு நோக்கி உருண்டது என் வாகன சக்கரங்கள் ,
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்(09-02-2013)
இடம் : பாலத்துறை -வழுக்குபாறை -முத்துகவுண்டனூர்-ஒத்தக்கால்மண்டபம்
கோவை மாநகராட்சி (தெற்கு மண்டலம்)
Bird watching in Sunday Morning with School Kids(10-02-2013)
பறவைகளுடன் விடியல் காலை (10-02-2013)
1.Spotted Munia
2.House Sparrow
3.Purple Sunbird
4.Lotens Sunbird
5.Small Sunbird
6.Purple Rumped Sunbird
7.Large Pied Wagtail
8.Yellow Wagtail
9.Paddy Field Pipit
10.Indian Robin
11.Oriental Magpie Robin
12.Common Tailor Bird
13.Ashy Prinia
14.Babbler’s
15.Red-Vented Bulbul
16.Red-Whiskered Bulbul
17.White Browed Bulbul
18.Common Iora
19.House Crow
20.Indian Treepie
21.Common Myna
22.White-Bellies Drongo
23.Black Drongo
24.Eurasian Golden Oriole
25.Red-Rumped Swalow
26.Lesser Golden-Backed Woodpecker
27.Copper Smith Barbet
28.Chestnut-Headed Bee-Eater
29.Indian Roller
30.Common Hoopoe
31.White-Breasted Kingfisher
32.Lesser Pied Kingfisher
33.Small Blue Kingfisher
34.House Swift
35.Spotted Owlet
36.Asian Koel
37.Greater Coucal
38.Pied Crested Cuckoo
39.Rose-Ringed Parakeet
40.Little Brown Dove
41.Spotted Dove
42.Blue Rock Pigeon
43.Wood Sanpiper
44.Red-Wattled Lapwing
45.Black Winged Stilt
46.Common Coot
47.Purple Moorhen
48.Indian Peafowl
49.Grey Francolin
50.Shikra
51.Black Kite
52.Black Shouldered Kite
53.Brahminy Kite
54.Spot-Billied duck
55.Oriental White IBIS
56.Eurasian Spoon Bill
57.Painted Stork
58.Indian Pond Heron
59.Cattle Egret
60.Little Egret
61.Median Egret
62.Grey Heron
63.Purple Heron
64.Spot-Billied Pelican
65.Large Egret
66.Snake Bird/Darter
67.Little Cormorant
68.Little Grebe

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன்







copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன் நொய்யல் அன்னையையும் , அன்னையின் அருள் வடிவான குளங்களையும் பற்றி சிறிது உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது !

தெரியலையே ,புரியலையே !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மழை தரும் மேகங்கள் போன இடம் தெரியலையே ,புரியலையே !!!
மனதினுள் மழை துளிகளில் நினைந்தது போல கனவு இன்று >>>
பாலை வனத்தில் நீச்சல் பயில முடியாது ,இனி
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாது !!!
நீரில்லாமல் ஏதும் இல்லை ,
நம்புவோம் தினமும்
"புது விடியல் இல்லாத உலகம் இல்லை "
-மழை பெய்து கொங்கு நாடு செழிக்க !
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
~எம்மை இயங்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையே -உன்னை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
-பசுமை துளிகள்
~உமேஷ் மருதாசலம்~

ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் மனிதன் இயற்கையை சிதைத்து ,
வளர்ச்சிபெற கற்றுக் கொண்டான் !!!
#இயற்கையை சிதைக்காமல் நமக்கு கிடைக்கும் வளர்ச்சிதான் நிலையான பாரதத்தை உருவாக்கும் !!!
~நாளைய பாரதம் நல்ல ஆராய்ச்சியாளர் கையில் இருக்க வேண்டும்~
-பாரத விரும்பி
உமேஷ் மருதாசலம்

மலைவாழ் மழலைகளுடன் ஒரு நாள் (26-01-2013)

பறவைகள் கூட !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பறவைகள் கூட மரத்தில் இருந்து
உதிர்ந்து விழுந்த குச்சிகளைத் தான்
கூடு கட்ட தேர்வு செய்கின்றன !
#ஆனால் மனிதன் மரங்களை வெட்டி
வீடு அமைக்கின்றான் ,
சாலை அமைக்கிறான் ,
கட்டில் அமைக்கிறான் ,
$ என்று மரங்களை மதித்து உணருவார்கள்
ஆறு அறிவு சுமக்கும் மனிதர்கள் ???
-இயற்கை இனியது
~உமேஷ் மருதாசலம்~

Thursday 7 February 2013

மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை ! -தூய சுவாச வேண்டி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மலர்கள் பூக்கும் மரங்களில் என்றும் வாசம் குறைவதில்லை ,
மலர்களின் வாசம் உணர நவீன கால மனிதர்களுக்கு மூக்குதான் இல்லை ,
மரங்கள் இலை அசைத்து நம்மை வா வா என அன்புடன் அழைத்தாலும் ,
ரம்பம் கொண்டு அறுக்கும் படையுடன் சென்று கொலை செய்கிறான் மனிதன் ,
மனிதர்களுக்கு சுவையான பழம் தந்து ருசி கொடுத்தாலும் -
மனிதன் மரங்களையும் லாபம் ஈட்டித் தருகிற கருவியாகதான் பார்க்கின்றான்
மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை !
-தூய சுவாச வேண்டி
~உமேஷ் மருதாசலம்~