Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Thursday 7 February 2013

சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~


சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

கோவை:வறட்சியால் ஏற்கனவே காய்ந்து போயுள்ள கோவை குளங்கள், வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் சுவடு தெரியாமல் சிறிது, சிறிதாக அழிந்து வருகின்றன. உக்கடம், வாலாங்குளம், அம்மன்குளம் வரிசையில், குறிச்சி குளமும் அடுத்த இரையாகி வருகிறது.பருவமழை பொய்த்துப் போன காலங்களிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வளம் கொழித்து வந்தது நொய்யல் ஆறு. இந்த ஆறுடன் தொடர்புப்படுத்தி, 173 கி.மீ., தூரத்தில் 32 குளங்கள் ஒன்றோடு இணைக்கும் ...விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இதில், கோவை நகர பகுதியில் முக்கியமாக ஒன்பது குளங்கள் இருந்தன. அவற்றில், அம்மன்குளம் இந்த இடமே தெரியாமல், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. எஞ்சியிருப்பவை, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தணம்குளம், செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் மட்டுமே.இவற்றில் மாநகரின் வளர்ச்சித் திட்டங்களில், "பலி கடா'வாகி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் ஆகியவை பரப்பையும், வனப்பையும் இழந்தன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், மின் நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை போன்றவை, இந்த குளங்களுக்குள் அமைந்துள்ளன. இவை தவிர, புதிய ரோடுகள், ரயில்வே பாலங்கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த இரண்டு குளங்களும் பொலிவை இழந்தன. நிலத்தையும், நீர்பரப்பையும் இழந்த இந்த இரண்டு குளங்களிலும் தண்ணீரும் பல காரணங்களால் கடுமையாக மாசுபட்டு வருகிறது.

கழிவுநீர், மருத்துவ கழிவு, டீசல் மற்றும் ஆயில் கழிவு என திடக்கழிவும், திரவக்கழிவுமாக இந்த குளங்கள் பாழடைந்து வருகின்றன.பொதுப்பணித்துறை கைவசம் இருந்த இந்த குளங்கள் 2009ம் ஆண்டு மாநகராட்சிக்கு கைமாறப்பட்டன. 90 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஆண்டுக்கு தலா ரூ. 100 வாடகைக்கு எட்டு குளங்களையும் மாநகராட்சி ஏற்றுக் கொண்டது. பொதுப்பணித் துறையிடம் இருந்து, மாநகராட்சி பொறுப்பில் குளங்கள் வந்தபோது, விடிவுகாலம் பிறக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது."ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில்' நிதி இருந்தும், குளங்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கவில்லை. மழையின்றி குளங்கள் வறண்டு வரும் நிலையில், நீர் ஆதாரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "சிறுதுளி' உள்ளிட்ட அமைப்புகள் குளங்களை தூர் வார முன்வந்து, மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அனுமதி கிடைக்கவில்லை.அதேநேரத்தில், குளங்களை காக்க வேண்டிய மாநகராட்சியோ, இருக்கும் குளங்களையும் சுவடு தெரியாமல் மண் மூடி புதைத்துவிடுவதில் குறியாகவே இருக்கிறது. இதற்கு உதாரணம், குறிச்சி குளம். கோவையின் தெற்கு பகுதிகளை வளம் கொழிக்க செய்த இந்த குளம், இன்று வறண்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி சாலையின் மறுபக்கத்தில் இருந்த சிறிய குளத்தை மூடும் பணியை மாநகராட்சி கச்சிதமாக செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, குளத்தின் பெரும்பாலான பகுதி மண் கொட்டப்பட்டு, மூடப்பட்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமையும்போது அருகில் உள்ள பிரதான குளத்தின் பெரும் பகுதிகளும், பல்வேறு திட்டங்களுக்காக மூடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வழக்கு தொடர திட்டம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தப் போகிறோம் என கூறி, பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை மாநகராட்சி கைப்பற்றியது. எந்த குளங்களையும் அழகுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் குளங்களை, பாதுகாப்பாக பராமரித்தாலே போதுமானது. கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல குளங்கள் இன்று கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன. குறிச்சி குளத்தின் ஒரு பகுதியை மூடி, பஸ் நிலையமாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=634947

No comments:

Post a Comment