Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Sunday 27 October 2013

விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம்

இன்று என் திட்டங்கள் எல்லாம் மாறிப்போனது காரணம் :
காலை பறவைப்பார்த்தல் நிகழ்வுக்கு சென்ற போது வேப்பமரத்தின் நிழலில் உறங்கிக்கிடந்த விவசாயி ஒருவரிடம் பேசியதுதான் காரணம் .இரவு முதல் விடியல் காலை நான்கு மணிவரை யானைக்கூட்டம் தனது தக்காளி நிலத்தில் தங்கியதால் உறக்கமிலாத இரவாகிப்போனதை கூறினார்.பின்னர் யானைகள் தங்கிய தக்காளி பூமியினை சென்று நோட்டமிட்டேன் . கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.விவசாயி பலம...ுறை தொலைபேசியில் அழைத்தும் வனத்துறை வந்துசேரவில்லை.அங்கே வனவிலங்கு நீர் அருந்தும் நீர் தொட்டிகள் பராமரிப்பின்றி ,நீர் வரும் ஓடைகள் எல்லாம் தனியார் பல்கலைக்கழகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டேன்.
அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது .பின்னர் காலை உணவை அவர்களின் குடிசை வீட்டில் உண்டு விட்டு மேலும் அந்த பகுதிகளில் கள ஆய்வு செய்தேன். மதியம் வரை சுற்றிப்பார்த்ததில் ஒரே கருத்தாக யானைகளின் வழித்தடம் கல்லூரிகளாக ,ரியல் எஸ்டேட் என பல ஆக்கிரமிப்புகளால் உள்ளன . உடனடியாக வனதுறையினை சேர்ந்த உயர் அதிகாரியினை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் வனவிலங்குகளுக்கும் அப்பாவி விவசாயிகளுக்கும் சந்திக்கும் இன்னல்களைப்பற்றி கூறினேன்.சில நம்பிக்கை தீர்வுதரும் வார்த்தைகளை அவர் தந்தார். அப்பாட என மாலை வீடு திரும்பினே. பின் கோவையின் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் பறவை பார்க்க சந்திப்போம் என அலைபேசியில் அழைத்தார் உக்கடம் குளத்தின் கரையில் சந்தித்தோம். அங்கே கடல் போல செவ்வானம் விரிந்திருக்க குழந்தைகள் குளத்தில் நீந்தி விளையாடுவதை கண்டு மகிழ்தோம்.சிறுவர்களுடன் இணைந்து துண்டு விரித்து மீன் பிடித்தோம்.பெரிய பெரிய நீர் பறவைகள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன .உக்கடம் பேருந்து நிலையம் ஆவின் பாலகத்தில் சுவையான பாதம் பால் அருந்திவிட்டு தித்திப்பாய் நகரப்பேருந்தில் கடந்த வாரம் மரம் நட்ட இடங்களில் நீர் பாய்ச்சி விட்டு ,வீடு திரும்பினேன். இந்த நாளவழக்கத்திற்கு மாறாக இனிய நாளாக மாறியது.
ஞாயிறு பயணி இவன்
~உமேஷ் மருதாசலம்~

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

No comments:

Post a Comment