Tonnes of Hazardous Plastic Waste from Truck Dumped in Noyyal river Kurichi Wetland Coimbatore லாரி-லாரியாக பிளாஸ்டிக் குப்பைகள் /கட்டிடகழிவு மண்களை குறிச்சி குளத்தின் கரையில் கொட்டியவர்களை கண்டுக்கொள்ளாமல் ஆதரிகிறதோ/வேடிக்கை பார்க்கிறதா கோவை அரசு.
குறிச்சிக்குளம் குப்பை மேடாகி விட்டது.குளத்தை தூருவாருகிறோம் என்னும் பெயரில் ஒரு கூட்டம் கிணறு தோண்டிவிட்டு சென்றுள்ளது.பல இடங்களில் கரைகள் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பில் மூழ்கி உள்ளது.
குறிச்சி/குனியமுத்தூர் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக 13 பெரிய குழாய் மூலம் குளத்தினுள் பாய்ந்து வருகிறது.
இப்போதைய நிலையில் குறிச்சி குளம் பாலைவனமாக காட்சி தருகிறது.கண்ணுக்கு கண்ணீரைப்போல ஒரு துளி நீர் கூட இல்லை.குளத்தினை மூடி பேருந்து நிலையம் அமைக்கும் ஆயுத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
7-மதகுகள் மண்கொட்டி மூடப்பட்டு இருந்த தடையம் தெரியாமல் உள்ளது.
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு கரையில் உடைந்து காணப்படுகிறது.
கோவையில் அரசுத்துறை சரிவர இயங்குவதால் தான் குளங்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.அரசுத்துறையை குறை கூறும் முன் நம்மைப்போன்ற பொது மக்கள் தான் உணர்ந்து தாமாக முன்வந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.குறிச்சி குளத்தை சுற்றி சமீக காலங்களில் எல்லைகடந்த ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து கொண்டே வருகின்றன,இது முன்றிலும் குளத்தின் நலனுக்கு கெடுதல் தரும் செயலாக மாறி வருகிறது.உடனடி போர்கால அடிப்படையில் அரசும்/மக்களும் இயங்கினால் மட்டுமே குறிச்சி குளத்தினை பாதுக்காக்க முடியும்.
கடந்த மாதத்தில் பெய்த மழையில் கோவையில் உள்ள எல்லா குளங்களுக்கும் நீர் சென்று நிரம்பிய நிலையில் குறிச்சி குளதிக்கு ஒரு துளி நீர் கூட வந்து சேரவில்லை காரணம் எல்லை கடந்த ஆக்கிரமிப்புகள்.
நீர் துளிகூட இல்லாத குளத்தினைக் காணும் போது எங்கள் தலை சுற்றுகிறது நாளை இந்த குளம் ரியல் எஸ்டேட் வீட்டுமனை ஆகிவிடக்கூடாது என்பதுதான் .
ஒன்று கூடி குறிச்சி குளம் பாதுகாப்போம்
நொய்யல் நதி பாய இடமில்லாமல் தவிக்கிறது
குறிச்சிப்பாலைவனத்தில் இவன்
உமேஷ் மருதாசலம்
25-11-2013
copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
No comments:
Post a Comment