Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Wednesday 29 February 2012

Honored by I.F.S officer's

copyrights @ umeshmarudhu-2012
Honored by I.F.S officers for my Committed Service to this Society...




~Save Nature For Future~

Vattamalai Odaikkarai issue

copyrights @ umeshmarudhu-2012

OSAI seeks CM's intervention to save eco-system near Vellakoil

OSAI, an NGO involved in conservation of ecology, has appealed to the Chief Minister to take expeditious measures to preserve the ecology of Vattamalai Odaikkarai about 7 km from Vellakoil in Tirupur district.

Memorandum

In a memorandum to Chief Minister Jayalalithaa, president of OSAI K. Kalidasan said that the checkdam at Vattamalai Odaikkarai constructed in 1974-78 serves as an ideal habitat for many birds and mammals.

The dam had reached its full capacity only once in 1980 and for the last 30 years it had vey little water. The dam and its surrounding areas have lot of trees and it resembles a forest. Recently the Public Works Department floated a tender to remove seemai karuvelam (Prosopis Juliflora) in about 206 hectares area, which was opposed by farmers and environmentalists, who staged a one-day fast at Vellakoil on January 25.

OSAI team visited the dam and the surrounding thorny bush eco-system recently and conducted an environmental impact study. The dam had no water flow because the small streams had completely dried up over the last 25 to 30 years and at present it was purely dependent on rain water.

Flora

In a two-hour flora identification programme, the team noticed substantial presence of seemai karuvelam and trees such as neem, tamarind, teak, palm, jujube or Indian date, Indian gooseberry, white barked acacia .

Forty-one species of birds such as Peacock, Asian paradise fly catcher, Rose-ringed parakeet, Common hoopoe, Greater coucal, Rufous treepie, Eurasian-collared dove, Spotted dove, Spot billed duck, Little grebe, Cattle egret, Intermediate egret, Little cormorant were recorded.

Peacocks

Large numbers of peacocks were spotted suggesting habitats like these are crucial to prevent peacocks from entering agricultural lands. The dry thorny bush ecosystem also supports mammals like spotted deer, porcupine, black naped hare, mongoose and Indian fox.

Wetland birds

At dusk more than 10,000 wetland birds such as Little egrets, Intermediate egrets, Cattle egrets, Spot billed ducks and Little cormorants are found here. The water body serves as the most important site for these wetland birds and for a huge number of other birds in the surrounding 50 km radius.

Mr. Kalidasan said that there was no second thought that seemai karuvelam should be removed. But it should be removed in a phased manner and native species should replace them. But cutting down of these trees at a stretch in the 206 hectare will have a devastating effect on these birds and animals, as they had adapted to this eco system in the last 20-30 years. There is no proper plan and steps for bringing water to this wetland from Amaravathy and other water resource. The tree cutting tender will not be of any help for improving the area and on the contrary will severely affect the eco-system. He urged the Chief Minister also should order cancellation of the tree cutting tender as in its present form would have a great negative impact on the eco-system if implemented.

Bird sanctuary

Vattamalai Odaikkarai water body should be identified and declared as a community reserve/conservation reserve wetland and should be upgraded into a bird sanctuary. Intervention of the Chief Minister alone will help in saving 10,000 wetland birds.




Thursday 23 February 2012

Plastic Free Vellingiris-2012

copyrights @ umeshmarudhu-2012



Plastic Free Vellingiris




வெள்ளிங்கிரி மலையில் பிளாஸ்டிக்,பாலிதீன்,சிகரேட்,சுபாரி ,மது , போதை பொருட்கள் கொண்டு செல்ல தடை!!!


The Vellingiri Mountains, a part of the Nilgiri Biosphere Reserve, is situated at the western border of Coimbatore District and comes under the Bolampatty range in Coimbatore Forest Division. On the top of the Vellingiri Mountains, a Shiva temple - Velliangiri Andavar is situated. Devotees from Coimbatore, neighboring districts and states come to this temple especially during the month of April for the auspicious Chithra Pournami.

An average of 4 lakh pilgrims climbs the mountain every year. Due to the huge influx of the pilgrims, polythene and other non environment friendly materials were a threat to the reserved forest along with the threat of accidental forest fires set up by matches and cigarettes from the public. If each pilgrim carries three polythene cover with them more than 10 lakh such covers would be dumped in the up hills which cannot be cleaned easily. Hence, considering the eco sensitivity of the region and the flora and fauna diversity resent here, the District Forest Officer,Mr.V.Thirunavukarasu,IFS, and Mr. Parthiban, Range Officer, Boluvampatty, decided to curb this influx of non eco friendly materials into the reserve forest this year.

As a result, the forest staff along with members of OSAI (Mahesh Prasanna, Ramesh, Kathir, Elan Chezhiyan, Sakthi Rajan , Umesh  and NSS students of Kumaraguru College of Engineering)set up checking points at the foothills of the mountain at the Poondy temple for monitoring from 20th February  to 21st February, 2012.

Devotees were advised not to carry non eco friendly items into the reserved forest and items like polythene covers, plastic, cigarettes, tobacco products, supari packets etc were not allowed into the reserved forest and were collected at the entry itself. Also pamphlets were given to the devotees mentioning the same and banners for put up for the public to understand. Even biscuit packets and other packed food items were allowed only after the removal of plastic covers.
Cloth bags and water bottles were sold by forest department at very minimal price as replacements for polythene covers and water packets. Devotees were requested to bring back water bottles, other belongings along with them when returning. Understanding that the devotees will be arriving round the clock, the above operation continued 24 hours a day, with a mix of forest department staff and volunteers taking turns in the monitoring operation.
This initiation got good support and cooperation from the pilgrims also. In future the Vellingiri Hills which is a catchment area of our Siruvani water will be protected from non eco friendly materials during the festival season.
A separate operation is also considered to clean the trek route in the reserve forest from non eco friendly items, if any, once the pilgrimage season comes to an end.



























Tuesday 21 February 2012

கடலோரக் கிராமங்களிலுள்ள மீனவர்களின் நிலை என்ன?

copyrights @ umeshmarudhu-2012


  ஆந்திர மாநிலம் நாகார்ஜூனசாகர் மற்றும் கேரள மாநிலம் பூதான்கெட்டு பகுதிகளில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்ட ஒரு பெரிய திட்டம், அம்மாநில மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் இடம்பெயர்ந்து தமிழகக் கரையோரமான கூடங்குளத்தில் நிலைகொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

ஆம், ரஷிய நாட்டின் உதவியோடு தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின் பணிகள் இப்போது மக்கள் சக்தியால் சற்று முடங்கிக் கிடக்கின்றன.
1992-ம் ஆண்டு நடைபெற்ற தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க ஒத்துக்கொண்டதுடன், அங்கு உற்பத்தியாகும் மின்சக்தியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளவும் முடிவு செய்ததுதான் தமிழகம் செய்த முதல் தவறு.தத்தமது மாநிலங்களில் அணுமின் நிலையத்தை நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த கேரளம், ஆந்திரம், கர்நாடக அரசுகள், அணுமின் நிலையம் அமைப்பதற்காக தமிழகத்தைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதில் இருந்தே அந்த மாநிலங்களின் ராஜதந்திரம் புரியும்.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சக்தியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே அணுமின் நிலையத்தின் மூலம் பெறப்படுகிறது என்ற நிலையில் இதுபோன்ற அணுமின் நிலையங்கள் தேவைதானா என்ற குரல் உலகம் முழுவதுமே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.கடற்கரையோரம் நிறுவப்படும் அணுமின் நிலைய உலைகளைக் குளிர்விக்கும், கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றும் ஆலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளையும் கடலில் கொட்ட வேண்டிய நிலையில் கடல் வளம் பாதிக்கப்படாதா?

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உவரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் வரையுள்ள கடலோரக் கிராமங்களிலுள்ள மீனவர்களின் நிலை என்ன?
கடலில் கலக்கும் கதிர்வீச்சு கழிவுகளால் மீன் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கும்.
மேலும் இந்த அணுமின் நிலையத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணையிலிருந்து கொண்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி கிடைக்காத நிலையில் விவசாயமும் பாழாகும்.

அணுஉலைக் கழிவுகளிலிருந்துதான், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் புளுட்டோனியம் பெறப்படுகிறது.கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய அணுமின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ புளுட்டோனியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடி பேருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.அப்படி என்றால் 1,000 கிலோ புளுட்டோனியம் மூலம் என்னவெல்லாம் நடக்கும்? கணக்குப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
இப்படி பல்வகை பிரச்னைகளை ஏற்படுத்தும் அணுஉலைக் கழிவுகளை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும் நிலையில் சுமார் 20 ஆண்டுகள் உலை இயங்கும் நிலையில் சுமார் 600 டன் கழிவு வெளியாகக் கூடும். இந்தக் கழிவை நாம் பாதுகாப்பாக பல ஆயிரம் ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது இயலுமா?இந்தக் கழிவுகளால் கடல் நீர் மாசடையும். மேலும் அணு உலையிலிருந்து வெளியாகும் நீராவி, புகை வடிவிலான கழிவுகள் மனிதனின் வியர்வை, சுவாசம் என ஒவ்வோர் அணுவிலும் புகுந்து அணுவின்றி எதுவும் அசையாது என்ற சொல்லுக்கு வலு சேர்ப்பதுபோல் உடலின் ஒவ்வொரு மூலக்கூற்றினையும் துவம்சம் செய்யாதா?

இதையும் தாண்டிச் சிந்தித்தால், உலையில் வெடிப்பு ஏற்பட்டால், சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி என்றால் அதன் பாதிப்பு கேரள மாநில எல்லை முதல் மதுரை வரை இருக்குமே. இந்த பரந்து விரிந்த பகுதிகளில் வாழும் மக்கள், கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், விவசாய நிலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது என்பது அரசுகளால் சாத்தியமாகக்கூடிய விஷயமா என்றால் நிச்சயம் இல்லை.
விஞ்ஞானத்தில் வளர்ந்த ஜெர்மனி போன்ற நாடுகளே அணுமின் திட்டங்களை முடக்குவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் வளர முயன்று வரும் இந்தியாவுக்கு, நமக்கு இது தேவைதானா?

Friday 17 February 2012

எப்போது தீரும் வால்பாறை சோகம்?

copyrights @ umeshmarudhu-2012


எப்போது தீரும் வால்பாறை சோகம்?
கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்.
க. காளிதாசன்


சமீபத்தில் வால்பாறையில் மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து சிறுத்தைகளால் தாக்கப்பட்டு 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தேயிலைத் தோட்டங்களில் பனியிலும், மழையிலும் உழைத்துச் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் அவை. குழந்தைகளை இழந்த அந்த ஏழைப் பெற்றோர்களின் வலி சாதாரணமானதல்ல.
மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலை எடுத்துச் செல்லாமல் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கூடிப் போராட்டம் நடத்தினர். ஊழியர்களைச் சிறைப்பிடித்தனர். சிலர் அவர்களைத் தாக்கவும் முற்பட்டனர். "புலிகள் காப்பகம் என்று அறிவித்ததைத் திரும்பப் பெறவேண்டும்', "வால்பாறையை விட்டு வனத்துறை வெளியேற வேண்டும்', "விலங்குகளைக் கொல்வதற்கு உரிமை வேண்டும்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். அவர்களைச் சமாதானப்படுத்த வந்த சார்-ஆட்சியரிடம் தங்கள் கோபத்தைக் கொட்டினர். அவர்களின் கோபம் மிக நியாயமானது, ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறினால் இப்பிரச்னை தீர்ந்து விடுமா?
இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றிய உண்மை நிலை அறிய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு அளித்த அறிக்கையில் காணப்பட்ட மகிழ்ச்சியான செய்தி, தமிழகக் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது என்பதுதான். அதன் விளைவாக ஆனைமலை, முதுமலை ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் புலிகள் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டன.
அதற்கு முன்பாக களக்காடு-முண்டந்துறை பகுதி மட்டுமே புலிகள் காப்பகமாக இருந்தது. இது நமது மாநில வனப்பாதுகாப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இயற்கை ஆர்வலர்கள் இதை மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கியபோது அப்பகுதி மக்களிடம் இதற்கு எதிரான கருத்து பரவத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக, வால்பாறையில் சிறுத்தைகளால் குழந்தைகள் மரணமடையும்போதெல்லாம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதாலேயே இச்சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் புலிகள் காப்பகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. மக்களிடம் பரப்பப்பட்ட சில தவறான தகவல்களே அதற்குக் காரணம்.
உண்மையில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் ஒதுக்கப்படும் பெரும் நிதி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்கே செலவிடப்பட உள்ளது.
புலிகளைப் போன்றே சிறுத்தைகளும் காட்டில் தமக்கென எல்லை வகுத்துக்கொண்டு தனித்து வாழ்பவை. இணை சேருகிற காலம் தவிர, அவை தம் எல்லைக்குள் வேறு சிறுத்தையை அனுமதிக்காது. தாயிடமிருந்து பிரியும் ஒவ்வோர் இளம் சிறுத்தையும் தமக்கான புதிய வாழ்விடத்தை அமைத்தாக வேண்டும். அவற்றில் சில மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள காடுகளைத் தமது வாழ்விடமாக்கிக் கொள்கின்றன.
புலிகளைப் போன்று, பெரிய விலங்குகளை மட்டுமே உணவாக்கி சிறுத்தைகள் வாழ்வதில்லை. எல்லா சூழ்நிலையிலும் வாழும் தகவமைப்பு பெற்றவை. முயல், மந்தி, சருகுமான், முள்ளம்பன்றி போன்ற சிறு விலங்குகள் இருந்தாலே சிறுத்தைகள் பிழைத்துக்கொள்ளும். தேயிலைத் தோட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இச்சிறுவிலங்குகள் இருப்பதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அங்கு இருந்து கொண்டேயிருக்கும். அங்குள்ள சிறுத்தைகளைக் கவரும் மற்றொன்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். சில நேரங்களில் நாய்களைத் தேடி அவை மனிதக் குடியிருப்புகளுக்கு வருகின்றன. கசாப்புகடைகளில் தூக்கி எறியப்படும் எஞ்சிய மாமிசக் கழிவுகளும் சிறுத்தைகளைக் கவர்ந்திழுப்பவை.
ஆனால், குழந்தைகள் கொல்லப்பட காரணம் என்ன? ஆய்வாளர்கள் இதை பல கோணங்களில் பார்க்கிறார்கள், குழந்தைகளைக் கொன்ற சிறுத்தைகளை மனித மாமிசம் உண்பவை என்று வரையறுக்க முடியாது. ஏனெனில், இச்சம்பவங்களில் குழந்தைகள் தாக்கப்பட்டு இறந்துள்ளனவே ஒழிய, சிறுத்தைகளால் உண்ணப்படவில்லை.
மேலும், மனிதர்களை உண்பவை எனில், அவை மனிதச் சுவைக்கு ஆட்பட்டு தொடர்ந்து மனிதர்களையே குறிவைத்துத் தாக்கும். அப்படி தொடர் சம்பவமாக இங்கு நிகழவில்லை.
தமது இரை விலங்குகளுக்கான பற்றாக்குறை இருப்பதால் அவை தாக்குகின்றன என்பதையும் ஆய்வுகள் மறுக்கின்றன. சமீபத்தில் அங்குள்ள இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் சிறுத்தைகளின் கழிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் முயல், முள்ளம்பன்றி, சருகுமான், கேளையாடு, கருமந்தி, கடமான் போன்றவையே அவற்றின் உணவாக இருப்பதை அறிந்துள்ளனர். இவ்விலங்குகள் அங்கு கணிசமாக காணப்படுகின்றன.
புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் இச்சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதும் தவறானதே. 2007-ல் தான் ஆனைமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1990-லிருந்து 2007-வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
இங்கு நடந்த சோக நிகழ்வுகள் அனைத்தும் வெளிச்சம் குறைந்த மாலைப்பொழுதிலேயே நடந்துள்ளன என்பது இச்சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும். இவற்றில் பெரும்பாலும் குழந்தைகள் குனிந்த நிலையில் ஏதாவது செயலில் இருக்கும்போதே தாக்கப்பட்டுள்ளன. தனது இரை விலங்காகக் கருதியே குழந்தைகளைச் சிறுத்தைகள் தாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபோதும் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. பிடிபடும் சிறுத்தைகள் வேறு காடுகளில் விடப்படுகின்றன.
சமீபத்தில் அக் குழந்தை கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்தான் ஒரு சிறுத்தை கூண்டில் பிடிபட்டு வேறு காட்டில் விடப்பட்டது. இப்படி பிடிப்பதால் இப்பிரச்னை தீராது என்பதை மகாராஷ்டிரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏனெனில், ஒரு சிறுத்தை அகற்றப்படும்போது அந்த இடத்தைத் தமதாக்கிக்கொண்டு அருகிலுள்ள காடுகளிலிருந்து வேறு சிறுத்தை அங்கு வந்துவிடும். எனவே சிறுத்தைகளே இங்கு இருக்கக் கூடாது என்பது நடைமுறை சாத்தியமற்றது.
ஆனால், நிகழ்வுகளைத் தவிர்க்க நாம் வேறு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். இச்சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் தேயிலைத்தோட்ட நிர்வாகத்துக்கும் முக்கிய பங்குண்டு. சிறுத்தைகளால் தாக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் பிரதான சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிக்கு போகும் குறுகிய வழித்தடங்களிலேயே நடைபெற்றுள்ளன. எனவே, குடியிருப்புகளுக்குப் போகும் பாதைகள் அகலமானதாகவும் இரவு நேரங்களில் மின் விளக்கின் வெளிச்சம் நிறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும்.
குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்கள் சிறுத்தைகள் பதுங்க வழிவகுக்கும். புதர்களை முற்றிலும் அழிக்க வேண்டும். எல்லா வீடுகளுக்கும் கழிவறைகள் அவசியமாகும். வீடுகளைச் சுற்றி போதிய தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பேருந்து வசதியற்ற பகுதிகளுக்கு அவ்வசதி செய்து தரப்பட வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்களை வேறு இடத்தில் அமைத்துத் தரவேண்டும். வீடுகளில் நாய்கள் வளர்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுத்தைகளைக் கவரும் மாமிசக் கடைகளின் கழிவுகள் முறையாகப் புதைக்கப்பட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனைகளிலும் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வெளிச்சம் மங்கிய மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் நடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடனே செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளைத் தனித்து நடக்க விடக்கூடாது. இதே ஆனைமலையில் டாப்சிலிப் போன்ற பகுதிகளில் அடர்ந்த காட்டின் நடுவே பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். அங்கும் குழந்தைகள் உண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. ஏனெனில், அம்மக்களிடம் உள்ள வனவிலங்குகளைப் பற்றிய எச்சரிக்கை உணர்வே காரணமாகும்.
வால்பாறை பகுதிகளில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய தானியங்கி கேமராக்கள் பொருத்தி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சம் தவிர்க்க கூண்டுவைத்து பிடிக்கப்படும் சிறுத்தைகளை வேறு பகுதிகளில் விடும்போது அவற்றின் நடமாட்டத்தை அறியும் நவீன சாதனங்களைப் பொருத்திய பின்பே விட வேண்டும்.
வனவிலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படும்போது கூடும் மக்களிடம் சிக்கித் தவிப்பது அங்குள்ள வனத்துறையே. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் வனத்துறைக்கு எதிராக திரும்புகிறது. உயர் அதிகாரிகளைக் காட்டிலும் களப் பணியாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். யாரும் விலங்குகளின் தாக்குதலை நியாயப்படுத்துவதில்லை. ஆனால், வனத்துறையால் மட்டுமே எல்லாமும் செய்துவிட முடியாது.
வனப்பாதுகாப்பு, குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளை விரட்டுதல், வேட்டைத்தடுப்பு, தீ தடுப்பு போன்றவற்றில் இரவு பகலாகப் பணியாற்றும் களப் பணியாளர்களைக் குறிப்பாக மிகச் சொற்ப ஊதியத்தில் தாற்காலிகப் பணியிலிருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை இதில் குறை கூறுவதோ குற்றம் சாட்டுவதோ பொருத்தமாகாது. இது அவர்களை மீறிய சம்பவங்களாகும். காட்டு விலங்குகள் இல்லாமல் காடு இருக்க முடியாது. காடு இல்லாத நாடு செழிக்க வாய்ப்பில்லை. ஆனைமலை போன்ற அரிய வனப்பகுதிகள் இயற்கை நமக்களித்துள்ள விலைமதிக்க முடியாத சொத்து. எந்த வன விலங்கும் நகரங்களில் நம் வீடு தேடி வந்து நம்மைத் தாக்குவதில்லை.
வால்பாறை போன்ற அவற்றின் வாழ்விடத்தில் நடக்கும் இச்சம்பவங்களைத் தவிர்க்க நாமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு எவ்வளவு இழப்பீட்டுத்தொகை கொடுத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது. எல்லோரும் விரும்புவது இனி எந்தக் குழந்தையும் தாக்கப்படக் கூடாது என்பதையே. அதை வனத்துறையால் மட்டும் செய்து விட முடியாது. அரசின் எல்லா துறைகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதியிலிருந்து சிறுத்தைகளை முற்றிலும் அப்புறப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் வாழ வேண்டும்.
கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர். 
~பசுமை உணர்வுடன் உமேஷ் ~

Wednesday 15 February 2012

மரங்களை வெட்டுங்கள்!!!

copyrights @ umeshmarudhu-2012




மரங்களை வெட்டுங்கள்!!


சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' 
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் 
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.



மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! ! 
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம் 

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 


For More Photos :
Lantana Camara Images , Parthenium Weed ,