Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Tuesday 31 December 2013

மண்ணுக்கு உரமானாவர்

இந்த நூற்றாண்டின் மாமனிதர் நம்மாழ்வார் ஐயா அவர்களை நாம் இழந்து விட்டோம் என்பது இந்த பிறவியில் நான் கேட்ட துயரமான தகவல்.
# ஐயா நீங்கள் ஆலமரம் போல மண்ணுக்கும் , உலகுக்கும் அர்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர்.
~உங்கள் உழைப்புக்கு நாடு தலைவணங்கும்,...உங்கள் முழக்கமான தமிழ் மண் வளத்தைக்காப்போம் தொடர்ந்து~அவரது கல்லறையில் சிமெண்ட் கோயில் கட்டிவிடாதீர்கள்,
அவர் பூஉலகில் உரமாக ,விதையாக ,பூக்களாக பூத்து மண்வளம் காக்க மண்ணுக்கு உரமானாவர்.
அவரின் மறைவு என்பது போராட்டத்தின் உச்சக்கட்டம் இயற்கையின் குலம் காக்க 75 வருடம் வேர்ஊன்றிய பூமித்தாயின் மகன் நம்ஆழ்வார் இன்று உரமானார்.மார்கழி திங்களில் திரு.நம்மாழ்வார் வைகுண்ட பதவி பெற்றார். இப்பூவுலகில் வாழ்ந்த இவர் சொர்கவாசல் சேர்ந்தார்.
# உங்களுடன் மாணவன் இவன்
உமேஷ் மருதாசலம்
30-12-2013

copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~

Monday 16 December 2013

சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை

கொள்ளைப்பாதை:"சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை"என்னும் தலைப்பில் ஆராய்ச்சியாளர் திரு.விஜய் குமார் ,அவர்கள் கோவையில் திரு.வானவராயர் அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.அன்று ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் நமது பாரம்பரிய சின்னங்களை இழந்துவிட்டோம் என்று நம் யாவருக்கும் தெரியும்.இன்றும் அவ்வப்போது செய்திகளில்
கல்,தங்கம் ,வெள்ளி ,செம்புகளாலான சிற்பங்கள்
கைப்பற்றப்பட்டன என்னும் செய்திகளை படிப்பதுண்டு.
அவையாவும் நமது நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளகண்காட்சிகளில்,மாளிகைகளில்,
அருங்காட்சியகத்தில்,கலைக்கூடங்களில் கண்ணாடி பெட்டிக்குள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளன....
உலகஅளவில் செயல்பட்டு வரும் சில கொள்ளையர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்களை நாடு கடத்தி விற்பனை செய்கின்றன.பல ஆலயங்களில் உண்மையான சிலைகளுக்கு பதிலாக போலியானைவை மாற்றி அமைக்கப்படுகின்றன.பெரும்பாலும் சிவ பெருமானின் நடராஜர்சிலைகள் ,முருகன் ,விநாயகர்,காளி,புத்தர்,சிலைகள்
விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தம் ,சுத்தமல்லி ஆலயங்களில் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் மூலம் தான் கண்டறிந்ததை ஆவணத்துடன் விளக்கிக்கூறினார்.ஆஸ்திரேலியா,அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர் மேலும் பல நாடுகளில் சிலைகள் காட்சிப்பொருளாக உரிய ஆவணத்துடன் போலியான முறையில் இருப்பதை ஆவணப்படுத்தினார்.
அவர் ,இப்படி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தில் மட்டும் 15,000 கோவில்களை அடையாளம் கொண்டுள்ளார்."இன்றுவரை நாம் இழந்து போனது இருக்கட்டும் இனியாவது இருப்பதை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கினார்".
அவர் அவர் ஊரின் அருகில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
திரு,விஜய் அவர்களின் நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக இருந்தாலும் அது அரங்கம் நிரம்பிய கூட்டத்துக்கு வாழ்நாளில் மறக்கமுடியாதது.
# இத்தகைய நிகழ்வு நமது கோவையில் நிகழ சூழ்நிலை அமைத்து தந்த "திரு.சங்கர் வானவராயர்" அவர்களுக்கு மண்ணின் மக்களின் நன்றிகள்.
இருளில் நிகளும் திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் ஆய்வுகள் செய்தியாக மட்டும் இல்லாமல் தீர்வுகளுக்கு வழி செய்பவை.
# பாரம்பரியத்தை மீட்டுக்கொண்டு வர ,இங்கு இருப்பதை பாதுகாக்க தேசத்தின் உரிமையினை மீண்டுஎடுக்க போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஒன்று பட்டு போராடுவோம்~வெல்வோம்~
https://www.facebook.com/photo.php?fbid=681134115241610&l=6a3fc14b5a

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~