Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Wednesday 16 January 2013

வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்

Tuesday 15 January 2013

ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்

என்வீட்டு தோட்டத்தில் இது அறுவடை காலம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
என்வீட்டு தோட்டத்தில் இது அறுவடை காலம்
மஞ்சள் , துவறை ,
மஞ்சள் முதல் ரகம் : 06-கிலோ ,
மஞ்சள் இரண்டாம் ரகம் : 09 கிலோ ,
அவறை முதல் ரகம் : 12 கிலோ .
இனி காயவைத்து , அரைத்து எங்கள் குடும்பத்தினருக்கும் ,சுற்றத்தாருக்கும் ,நண்பர்களுக்கும் பகிர்வோம் !
மாடு இருக்கும் பட்டியினை சுத்தம் செய்து ,
மாட்டினை சுத்தம் செய்து இன்று
மாலை மாட்டுப்பொங்கலிட்டு தென்னந்தோப்பில் வணங்குகிறோம் !
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
~ கொங்கு செழித்தால் , எங்கும் செழிக்கும் ~

Monday 14 January 2013

தூமனூர் - சேம்புக்கரை மலை கிராமம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~

கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்(13-01-2013)
இடம் :தூமனூர் - சேம்புக்கரை மலை கிராமம்
திருப்பாவை - திருவெண்பாவை சுக்ரவார்பேட்டையில் காலையில் கோயிலில் கூவ ,
என் வாகனம் ஒரு சூழல் நண்பரை அழைத்து கொண்டு ஆனைகட்டி சாலையில் ஊர்ந்தது,
கடும் உறைபனியோ , என்னை மொய்க்க ,
சூரியன் கிழக்கே தலைதூக்கியது ,
மலைத்தொடரை ஏற தயாரானது என் கால்கள்,
பழம் பழுத்த ஆலமரத்தில் காட்டுப்பறவைகள் சங்கீதம் பாட ,
யானைகள் ,காட்டெருமைகள் , கடமான்கள் ,புள்ளிமான்கள் ,கரடி ,சிறுத்தை ,செந்நாய் ,மரநாய் ,கீரி சென்ற தடையங்கள் எங்கள் கவனத்தை ஈர்க்க
காட்டுக்கோழி எங்களின் வருகையை காடுமுழுவதும் கூவியது ,

மது பயன்பாடு வனபகுதிக்குள் ஆவனமாக தேவையற்ற வெளியாட்கள் நடமாட்டம் உறுதியானது ,
பிளாஸ்டிக் குப்பைகள் அங்கொன்றும் - இங்கொன்றும் வனபகுதியில் தென்பட,
தூமனூர் மலை கிராமம் அடைந்து கால்கள் ,
விடியல் காலையில் மது அருந்திய இரு-மலை மக்கள் எங்களை வரவேற்க,

சிறார்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் விளையாடும் சிறுவர்கள் எங்களை நலம் விசாரித்தனர் ,
நகரம் சென்று கல்லூரிபயிலும் மூவர் கிராமத்தை சுற்றிகாட்டினர் ,
ஊர் உருவான வரலாறு ,
தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து உரையாடினோம் ,

விவசாயம் செய்ய மழையில்லை (மக்கள் இல்லை),
புற்கள் கூட தலைத்தூக்க முன்வரவில்லை,
குடிக்க கூட குட்டையில் நீர் தேங்கி நிற்கவில்லை ,
சிட்டுக்குருவிகள் "பால்வாடி" பள்ளியில் பாடம் கற்க,
கைக்குழந்தைகள் விளையாட ஒரு பொம்மை இல்லை ,

அங்கொன்றும் , இங்கொன்றும் காணப்பட்ட வெள்ளை மேகங்கள் ,
எங்களை சேம்புக்கரையில் சேர்த்தது ,
தீயில் கருகிய மூங்கில் மரங்கள் ,
வானத்தில் பறந்து எங்களை நோட்டமிட்ட கருங்கழுகு ,
குளிர் காற்றில் சிறகடித்த மலைப்பறவைகள் ,
நீரின்றி வெடித்த ஓடைகள் / குட்டைகள் ,
ஜீப்பின் மேலே வெளியே தொங்கியபடி மலைமக்களுடன் கரடு முரடான பாதைகளில் ஆனைகட்டி பயணம் ,
உச்சிவெயிலின் தாக்கம் அதிகரிக்க பசியுடன் கோவைநோக்கி நகர்ந்தது என் பயணம் !
Bird Watching @ Anaikatti Tribal Settlement:
1. Black Headed Munia
2. House Sparrow
3. Oriental white Eye
4. Purple Sunbird
5. Loten’s Sunbird
6. Purple-Rumped Sunbird
7. Large Pied Wagtail
8. Yellow Wagtail
9. Forest Wagtail
10. Indian Robin
11. Pied Bush Chat
12. Oriental Magpie Robin
13. Ashy Prinia
14. Common Tailor Bird
15. Asian Paradise Flycatcher
16. Jungle Babbler
17. Rufous-Bellied Babbler
18. White-Browed Bulbul
19. Red-Whiskered Bulbul
20. Red-vented Bulbul
21. Jerdon’s Leaf Bird
22. Common Iora
23. Small Minivet
24. Jungle Crow
25. House Crow
26. Indian Treepie
27. Common Hill Myna
28. Jungle Myna
29. Common Myna
30. Brahminy Starling
31. Rosy Starling
32. Bronzed Drongo
33. White-Bellied Drongo
34. Greater Racket Tailed Drongo
35. Black Drongo
36. Black-Headed Oriole
37. Eurasian Golden Oriole
38. Brown Shrike
39. House Swallow
40. White Cheeked Barbet
41. Crimson-Throated Barbet
42. CopperSmith Barbet
43. Common Hoopoe
44. Indian Roller
45. Chestnut-Headed Bee-Eater
46. White-Breasted Kingfisher
47. Spotted Owlet
48. Greater Coucal
49. Small Green-Billed Malkoha
50. Asian Koel
51. Malabar Parakeet
52. Rose-Ringed Parakeet
53. Spotted Dove
54. Little Brown Dove
55. Blue Rock Pigeon
56. Red-Wattled Lapwing
57. Grey Jungle Fowl
58. Indian Pea Fowl
59. Common Kestrel
60. Black Eagle
61. Black Kite
62. Shikra
63. Cattle Egret
64. Indian Pond Heron

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா? புதியதலைமுறையின் புலனாய்வு

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா?
புதியதலைமுறையின் புலனாய்வு

கோயமுத்தூர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. இது குறித்து புதிய தலைமுறை நடத்திய புலனாய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டும் மட்டும் 800 முறை யானைகள் காட்டைவிட்டு வெளியே வந்திருக்கின்றன. 20 பேர் யானை தாக்கி இறந்திருக்கிறார்கள். 17 யானைகள் மின்சார வேலிகள், ரயில் பாதைகள் ஆகிவற்றில் சிக்கி பலியாகியிருக்கின்றன. இந்த மோதல்கள் அனைவராலும் பேசப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தனியார் அமைப்புகள் போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை வனப்பகுதியை ஒட்டி கட்டியுள்ளது இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று வனத்துறை தெரிவிக்கிறது.

விதிமுறை மீறிய ஈஷா?: இக்கரை போளுவாம்பட்டி காப்புக்காடுகளை ஓட்டி அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் மனநல மேம்பாடு குறித்த சேவையை கடந்த 30 ஆண்டுகளாக செய்துவருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான யோகா விரும்பிகளை ஈர்க்கும் இந்த மையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். 113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது என்கிறது வனத்துறையின் ஆவணங்கள். இதன் காரணமாகவே யானைகள் அடிக்கடி காட்டைவிட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்திவருகிறது என்கிறது வனத்துறையின் அறிக்கை.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் என அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம். இப்போது ஈஷா யோகா மையத்தின் விதிமுறை மீறல்களை முதலில் பார்ப்போம்.

ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடம் மலையிடப் பாதுகாப்பு குழுவின் கீழ் வரும் பகுதி. இந்த வன எல்லையை ஒட்டி கட்டடங்கள் கட்ட தொடங்குவதற்கு முன்பாகவே மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 69 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்களை ஈஷா யோகா மையம் இதுவரை வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில், கட்டிடங்களுக்கு போளுவாம்பட்டி ஊராட்சியிடம் உரிய அனுமதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாயிரம் சதுர அடிக்குமட்டும்தான் ஊராட்சி அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கும் ஊராட்சி தலைவர் சதானந்தம், யானைகள் தொல்லை அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கிறார்.

ஈஷாவின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் காடுகளைவிட்டு வெளியே வருதாக வனத்துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த நரசீபுரம் ஊராட்சி தலைவர் முரளியும் உறுதிப்படுத்துகிறார்.

இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில் தங்களது நடவடிக்கைகளால் வனத்திற்கும், யானைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அமைப்புகளை மதிக்காத ஈஷா? ஈஷா அமைப்பு கட்டியுள்ள 60 கட்டடங்களும், கட்டிவரும் 34 கட்டுமான பணிகளுக்கும் உரிய அனுமதியளிக்க கோரி நகர் ஊரமைப்புதுறைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறது. அனைத்து கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நகர் ஊரமைப்புதுறை உத்தரவிட்டது. ஆனால் அதை ஈஷா யோகா மையம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நகர் ஊரமைப்புதுறை நிறுத்த கடிதத்திற்கு பிறகு சூர்ய குண்டம் என்ற கட்டுமானத்தை நிறுவி அதை டிசம்பர் 22 ஆம் தேதி செயல்பாட்டிற்கு திறந்திருக்கிறது ஈஷா யோகா மையம். இது குறித்து கேட்டதற்கு நகர் ஊரமைப்புதுறையின் கடிதத்தை மதித்து கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டதாக ஈஷா யோகா மையம் விளக்கமளிக்கிறது. இன்னும் கட்டுமானப்பணிகளை தொடர்வதால், அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றப்போவதாக டிசம்பர் 24ஆம் தேதி இறுதி கடிதம் ஒன்றை ஈஷாவிற்கு, நகர் ஊரமைப்புத்துறை அனுப்பியிருக்கிறது.

இண்டஸ் கல்லூரியின் விதிமீறல்கள்: இதேபோல், கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ளது இண்டஸ் பொறியியல் கல்லூரியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இண்டஸின் சுற்றுச்சுவர், முன்பக்க நுழைவு வாயில் ஆகியவை வன எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
வனப்பகுதியை ஒட்டி 150 மீட்டர் buffer zone ஏன் விட வேண்டும் என்ற கேள்வி எழலாம். யானைகள் உயரமாக இருக்கும் பாறைகள் மீது ஏறுவதில்லை. வலசைக்கு சமதளம் தேவைப்படுகிறது. நீங்கள் பார்க்கும் இந்த பகுதியைப் போல் ஆக்கிரமிப்புகள் தொடரும் வரையில் யானை-மனித மோதல்கள் ஓயப்போவதில்லை.

ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கும் இண்டஸ் கல்லூரி நிர்வாகம் இதுவரை முக்கியமான துறைகளான வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை என்று அரசு துறைகளின் ஆவணங்கள் உறுதியாகச் சொல்கின்றன. இந்த கட்டடங்களை இடிக்கச்சொல்லி ஒரு நோட்டிசை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருகிறது ஆலந்துறை பேரூராட்சி.

விதிகளுக்கு புறம்பாக தாமரா ரிசார்ட்ஸ்?கோவையின் பிரபலமான பிரிக்கால் நிறுவனத்தினரால் நடத்தப்பட்டுவரும் தாமரா விடுதியின் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. பேரூராட்சி, நகர் ஊரமைப்புதுறை, வனத்துறை, என எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் தாமிரா விடுதி கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட பொது சம்பந்த துறைகளிடம் அனுமதிக்கு விண்ணபித்திருக்கிறோம் என்றார்.

உயரமான சுற்றுச்சுவர் அமைக்கலாமா?:மத்துவராயபுரம் நெல்லூர் வயலில் அமைந்திருக்கும், சின்மையா சர்வதேச உரைவிடப் பள்ளி மீதும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிகளை புறக்கணித்துவிட்டு, சமீபத்தில் வன எல்லையை ஒட்டியே சின்மையா நிறுவனம் உயரமான சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது. அதேபோல் அனுமதியின்றி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த விதிமுறை மீறல்கள் குறித்து விளக்கம் கேட்டதற்கு பதில் இல்லை.

விதிகளை மீறிய அமிர்தானந்தாமயி?: மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற்றுள்ள மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனமும் விதிகளை கடைபிடிக்கவில்லை. வனத்துறை தடையில்லாச் சான்று வழங்கும் பொது வன எல்லையிலிருந்து 150 மீட்டர் நீளத்திற்கு எவ்வித கட்டடிடமும், வேலியும் அமைக்க கூடாது என்ற நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், வன எல்லையை ஒட்டியே அமிர்தாமயி நிறுவனம் மின்வேலி அமைத்திருக்கிறது. அதேபோல், அந்தப்பகுதியில் நீர் நிலைகளையும் காக்க தவறி இருக்கிறது. இது குறித்து அமிர்தனந்தாமயி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.

யானைகளை விரட்டும் ஆபத்தான பணி:காட்டிலிருந்து வெளியே வரும் யானைகளை விரட்டும் பணி மிகவும் ஆபத்தானது. கோவைப்பகுதியில் தினமும் காட்டைவிட்டு வெளியே வந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட யானைகள் பாதுகாப்பு படையினருடன் புதிய தலைமுறை செய்திக்குழுவினர் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை இப்போது பார்க்கலாம். கோவை வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் ஆயிரக்கணக்கான யானைகள் காட்டைவிட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவருகிறன. 20 யானைகள் காட்டைவிட்டு வெளி வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தற்போது தகவல் வந்திருக்கிறது.

கோவையில் தனியார் ஆக்கிரமிப்புகளை பார்த்து கோபப்படும் யானைகள் குடியிருப்புகள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. அப்படி 8 யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்திருக்கின்றன. அவைகளை வனத்துறையினர் பட்டாசு விட்டு விரட்டுவதை நேரடியாக பார்க்கலாம். வனத்துறையிருக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் தூங்கத இரவுகளாக இருக்கின்றன. தனியார் ஆக்கிரமிப்புகளால் யானைகள் வெளிவருகின்றன.

இதனால் மனித விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.

பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? :பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டங்களைக் கட்டினால் அவற்றை தடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுசூழல்துறை, நகர் ஊரமைப்புத்துறை இப்படி பல அமைப்புகள் இருந்தாலும், அனுமதியில்லாத கட்டடங்களை முறைப்படுத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை என்கிறார் இந்த முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களை சேகரித்த பொதுநல ஆர்வலர் சிவா.

மலைதள பாதுகாப்புக்குழு என்ன செய்கிறது?:2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட மலை தாலுக்காக்களில் கட்டடப்பணிகள் தொடங்க மலைதள பாதுகாப்புக்குழு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த குழு கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வேலையைமட்டும் செய்கிறது. சுற்றுச்சூழல் குறித்த பார்வை இதற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியருக்கு என்ன பொறுப்பு?: மலைதள பாதுகாப்புக்குழு கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் இருக்கிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக கோவை மாவட்டத்தில் எழும்பியிருக்கும் கட்டடங்கள் குறித்து தமக்கு தெரியவரவில்லை என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர்.

வனப்பகுதிகள் பாதுகாக்கப்படும்: இது குறித்து மலைதளக்குழுவின் தலைவரும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலரிடம் கேட்டபோது, நகர் ஊரமைப்புத்துறை சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை கண்காணித்து அகற்றிவருவதாக தெரிவித்தார். வனப்பகுதிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அந்த துறை தெரிவித்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

காணொளி: http://puthiyathalaimurai.tv/index.php/video-gallery?video=826

Friday 11 January 2013

இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
வானில் வட்டமிட்டு பறக்கும் கரும்பருந்து எழுப்பும் சப்தம் எதை உணர்த்துகிறது ?
பறவை கூடு மறைத்த இலைகள் எல்லாம் இன்று சுட்டெரியும் வெயிலில் காய்ந்து-உதிர்ந்து போனது ,
நீர் தாங்கிய குளங்களில் எல்லாம் இன்று
கோழி கழிவுகள் ரத்த வெறி பிடித்த நாய்கள் என்னை அச்சுறுத்துகின்றன ,
மாடப்புறாக்கள் என் வீட்டு மாடியில் தானியங்களை உண்ண ,
அன்று மரம் நிறைந்த சாலைகளோ இன்று
தலையற்று நிற்கின்றன ,
சுவாசிக்க சுத்தமான காற்றில்லை ,
உண்ண ஆரோகியமான உணவில்லை ,
இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!
-வாழ்வின் உரிமை தேடி
உமேஷ் மருதாசலம்
 

என்று தனியும் தமிழரின் நீர்த்தாகம்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
தமிழகத்தில் விவசாயி வறட்சியால் தற்கொலை செய்வதையும் , 
யானை தாக்கி இறந்து போவதையும்
தமிழக அரசு நிவாரண நிதி என "லஞ்சம்" கொடுத்து பிரச்சனையை மூடி மறைத்து விடுகிறது !
## என்று தனியும் தமிழரின் நீர்த்தாகம்
கண்ணீருடன்
-உமேஷ் மருதாசலம்

நலம் வாழ - குளம் காக்க

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
சின்ன(பிஞ்சு) மீன்கொத்தி ஒன்று குளத்தின் கரையில் உணவுக்காக அங்கும் இங்கும் பறந்தது ,
சின்னக் கொக்குகள் கூட்டமாக மீன் தேடிக்கொண்டிருந்தன ,
கருடப்பருந்து வானில் வட்டமிட்டது ,
நாய்கள் குளத்தில் நீந்தி வெயிலின் வெப்பம் தனித்தன ,
நீர் கோழிகள் கரையில் மெய்ந்தன !
மாசுபட்ட கறுப்புநிற குளம் நிறைந்த சாக்கடை / கழிவு நீரின் அருகில் நிற்கமுடியவில்லை 
நாற்றம் குமட்டுகிறது ,
பேருந்து நிலையம் கட்ட குளம் மூடப்பட்டு வருகிறது, மாநகராட்சியும் குளத்தினை மக்கள் பங்களிப்புடன் மூட ஊக்கம் படுத்துகிறது ,
வாகனங்கள் இரைச்சலை உண்டாக்க நீர்பறவைகள் நிம்மதியான இடம் தேடி பறந்து சென்றன ,
நீரற்ற குளத்தினை கண்டு சூரியனும் சிவப்பு முகத்துடன் மேற்கு வானில் கோபமாய் மறைந்தான் !
நலம் வாழ - குளம் காக்க 
உமேஷ் மருதாசலம்

என் வீட்டு பறவைகள்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
என் வீட்டு மாடியில் அமர்ந்திருந்த என் கண்களுக்கு விருந்தளித்த,
என் வீட்டு பறவைகள்
என் வீட்டை சுற்றி இத்தனை பறவைகளா ?
Bird Watching in House (07-01-2012)
1..தினைக்குருவி Muniya
2.சிட்டுக்குருவி House Sparrow
3.தேன் சிட்டு Sunbird
4.குளத்து குருவி White Browed Wagtail
5.தையல் சிட்டுTailor Bird
6.கதிர்குருவி Ashy Prinia
7.நல்ல காக்கா Crow
8.வால் காக்கை IndianTreepie
9.நாஹணவாய் Myna
10.கரிச்சான் குருவி Black Drongo
11.மாங்குயில் Golden Oriole
12.தம்படி குருவி Swallow
13.சின்ன குக்குறவன் CM Barbet
14.பனங்காடை Indian Roller
15.சவல் குருவி Hoopoe
16.மீன்கொத்தி WB Kingfisher
17.குயில் Asian Koel
18.கிளி RR parakeet
19.மாட புறா BR Pigeon
20.மயில் Peofowl
21.நீர் கோழி Water Hen
22.கறும் பருந்து Black Kite
23.வெள்ளை கொக்கு Medium Egret
24.உன்னி கொக்கு Cattle Egret
25.குளத்து கொக்கு Indian Pond Heron
26.நீர் காகம் Cormorant
 

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: நிரந்தர தீர்வு எப்போது?

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: நிரந்தர தீர்வு எப்போது? 
தமிழகத்தில் அதிக அளவு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஒன்று கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி.

காலப்போக்கில் யானைகளின் வழித் தடங்களில் கல்வி நிறுவனங்களும், ஆசிரமங்களும் கட்டப்பட்டதால், அவை தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டதாக மலைகிராம மக்கள் கூறுகின்றனர். யானைகள் பாரம்பரியமாய் பயன்படுத்திய பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதில், சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர் வனத்துறையினர்.

வேறு வழியின்றி மலைகிராங்களுக்குள் வரும் காட்டு யானைகள் கண்ணில் படுபவர்களையெல்லாம் தாக்குவதாக கூறுகின்றனர் பாதிப்புக்குள்ளாகும் மக்கள். கோவை, பெரியநாயக்கன் வனச் சரகங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதும், பிறகு வனத்துறையினர் அவற்றை விரட்டுவதும் வாடிக்கையான நிகழ்வாக இங்கு மாறி உள்ளது. இனியும் தாமதிக்காமல் இந்த பிரச்னைக்கு அரசு நிர்வாகம் விரைவான தீர்வினை காண வேண்டும் என்கின்றனர் மலைவாழ் கிராம மக்கள்.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுப்பதற்காக, யானைகள் தடுப்பு அகழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

நிரந்தர தீர்வு எப்போது? மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதற்கு, வனங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதும், ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், விலை மதிப்பதற்ற மனித உயிர்கள் பலியாவதை யாரும் தடுக்க இயலாது.

தமிழ் பேசும் தமிழன்

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு கிராமங்களெல்லாம் வீட்டினை வெள்ளை அடிக்கிறார்கள் !
அப்போ நகரத்தார் நீங்கள் ?
பண்டிகைகள் கொண்டாட தான் , 
நம் கலாச்சாரத்தை பின்பற்றத்தான் !!!
"புதிய திரைப்படம் காண அல்ல , 
மதுஅருந்த அல்ல , 
ஊட்டி-கொடைக்கானல் சுற்றுலாசெல்ல அல்ல" 
நீங்களே நம் தமிழர் பண்பாட்டினை மறந்துபோனால் - இனி உங்கள் குழந்தைகளுக்கு "நியூ இயர் " மட்டுமே விழாவாக மாறிவிடும் !!!
!தமிழ் செம்மொழி -நம் மொழி!
~தமிழ் பேசும் தமிழன்~
-உமேஷ் மருதாசலம்

Sunday 6 January 2013

காட்டின் விரும்பி - காடு விரும்பி

copyrights @ umeshmarudhu-2013
 ~Save Nature For Future~

காட்டில் இருக்கும் மரங்களெல்லாம் வரவேற்புரை குளிர்ச்சியாக ஆற்றியது !
வண்டுகள் என்னை கட்டியனைத்து,
நான் காடுவந்த சந்தோஷத்தில் , காடு குளிர்ந்தது !!!
இரவு மகிழ்ந்தது ...!
ஆராய்ச்சி நிலைய நண்பர்களுடன் இரவில்
உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன் ,
காட்டின் விரும்பி - காடு விரும்பி !
உமேஷ் மருதாசலம்


பறவைகளுடன் ஒரு நாள் பயணம்(05-01-2013)
ஜம்புகண்டி மலைக்கிராமம்
காட்டில் நீரோடிய பள்ளங்களில் வறட்சி தலைவிரிக்க,
மான்கள் தலை நிமிர்ந்து என்னைப் பார்க்க ,
பறவைகள் கூட்டத்தில் ஆலோசனை செய்ய ,
ஒற்றை யானை மரம் ஒடித்து உண்ண ,
யானைசாணதில் புளியங்கொட்டைகள் மணக்க !
பட்டாம்பூச்சிகள் , வண்டுகள் சத்துகளை எடுக்க ,
சிலந்திகள் வலை விரித்து பூச்சிக்காக காத்திருக்க ,
மரங்கள் காலையில் புது காற்றினை வெளிப்படுத்த ,
இன்று என் கால்கள் காட்டிலும் - குளத்திலும் நடந்தன !!!
பறவை விரும்பி
-உமேஷ் மருதாசலம்
Bird Watching @ JAMBUKANDI:Anaikatti (05-01-2013)
1. Black Headed Munia
2. House Sparrow
3. Oriental White Eye
4. Purple Sunbird
5. Loten’s Sunbird
6. Small Sunbird
7. Purple-Rumped Sunbird
8. Large Pied Wagtail
9. Yellow Wagtail
10. Forest Wagtail
11. Black-Lored Yellow Tit
12. Indian Robin
13. Pied Bushchat
14. Oriental Magpie Robin
15. Ashy Prinia
16. Common Tailor Bird
17. Asian Paradise-Flycatcher
18. Babbler’s
19. White-Browed Bulbul
20. Red-Whiskered Bulbul
21. Red-Vented Bulbul
22. Asian Fairy Bluebird
23. Jerdon’s Chloropsis
24. Common Iora
25. Small Minivet
26. Scarlet Minivet
27. Common Wood Shrike
28. Jungle Crow
29. House Crow
30. Indian Treepie
31. Hill Myna
32. Jungle Myna
33. Common Myna
34. Brahminy Starling
35. Rosy Starling
36. Bronzed Drongo
37. White-Bellied Drongo
38. Black Drongo
39. Eurasian Golden Oriole
40. Black Naped Oriole
41. Red-Rumped Swallow
42. White Cheeked Barbet
43. Lesser Golden-Backed Woodpecker
44. Crimson-Throated Barbet
45. Coppersmith Barbet
46. Indian Grey Hornbill
47. Common Hoopoe
48. Indian Roller
49. Chestnut-Headed Bee-Eater
50. White-Breasted Kingfisher
51. House Swift
52. Spotted Owlet
53. Brown Fish-Owl
54. Greater Coucal
55. Green-Billed Malkoha
56. Asian Koel
57. Rose-Ringed Parakeet
58. Malabar Parakeet / Blue-winged Parakeet
59. Little Brown Dove
60. Spotted Dove
61. Blue Rock Pigeon
62. Common Sandpiper
63. Red-Wattled Lapwing
64. Purple Moorhen
65. Common Coot
66. Indian Peafowl
67. Grey Junglefowl
68. Grey Francolin
69. Common Kestrel
70. Black Eagle
71. Common Bazzard
72. Shikra
73. Black Kite
74. Black Shouldered Kite
75. Spot-Billed Duck
76. Painted Stork
77. Little Egret
78. Cattle Egret
79. Indian Pond Heron
80. Purple Heron
81. Grey Heron
82. Spot-Billed Pelican
83. Darter/Snake Bird
84. Little Cormorant
 



Friday 4 January 2013

நீரெல்லாம் போச்சு

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

குளம் நீரெல்லாம் அழுகிபோச்சு ,
குடிநீரில் எல்லாம் கலந்துபோச்சு ,
குளமெல்லாம் வறண்டுபோச்சு ,
நீரெல்லாம் மாசாச்சு ,
இப்போ நோயெல்லாம் வந்தாச்சு ,
தோலெல்லாம் சொரியாச்சு ,
மருந்து எல்லாம் பொய்யாச்சு ,
இதுவே தினம் வாடிக்கையாச்சு !
ஒப்பாரி பாடி
-உமேஷ் மருதாசலம்