Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Sunday 15 July 2012

கோயம்புத்தூர் மாவட்ட வன பகுதியில் ராணுவ பயிற்சி மையமா ?

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

கோயம்புத்தூர் மாவட்ட வன பகுதியில் ராணுவ பயிற்சி மையமா ?
https://www.facebook.com/photo.php?fbid=448753085146382&set=a.141682492520111.18490.100000350831555&type=1&theater
கோயம்புத்தூர் மாவட்ட வனசரக பகுதிக்கு உட்பட , எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வன பகுதியில் வெள்ளைகாரர்கள் காலத்தில் துவங்கி இன்று வரை , துணை ராணுவம் , பிற மாநில போலீஸ் , போன்ற வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் மலையேறும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

அவர்கள் வனபகுதியில் உள்ள ஒரு மலைகோவிலை சுற்றி உள்ள அடர்ந்த வன பகுதிகளில் பாறை இடுக்குகளில் , புதர்களில் , மறைவான இடங்களில் கூடாரங்கள் அமைத்து கூட்டம் கூட்டமாக பல நாட்களாக பலர் தங்கி பயற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் இரவு , பகல் பாராமல் எப்பொழுதும் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் .

அவர்கள் தங்குவதால் வன விலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் தடைசெய்ய படுகிறது , துப்பாகியால் எழுப்படும் வெடிக்கும் சப்தத்தினால் பல வன விலங்குகள் பயந்து , இன்னல்களுக்கு உட்படுகின்றன .

சில சமயம் மான்கள் , கரடி , சிறுத்தைகள் குண்டு அடிபட்டு மரணம் அடைகின்றன , அது அவர்களால் வெளி உலகுக்கு தெரிவிக்க படாமல் மறைக்க படுகின்றன.

கடைசியாக நான் சென்று பார்த்த வரை இன்றும் புள்ளிமான்கள் , கரடி , யானை கூட்டம் உலவுவதை பதிவு செய்தேன் ,அவற்றின் கால் தடங்கள் , எச்சங்கள் , சாணங்கள் பதிவு செய்து உள்ளேன்.

அவர்கள் பயிற்சி செய்வதை தவறு என குற்றம் சொல்ல நான் இதனை எழுதவில்லை , முக்கிய காரணம் காட்டின் சுகாதாரம் சீரழிந்து விட்டது :

அவர்கள் பயம் படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் , தினசரி கழிவுகள் , மனித கழிவுகள் காட்டின் அழகை குறைகின்றன.

அங்கு கறுஞ்சிறுத்தை இருபதாக ஆதாரம் பலரால் உறுதி செய்யப்பட்டுள்ளது !

பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகம் , அதனை உண்ணும் மான்களின் நிலைமை "?"

கரடிகள் வாழும் பாறை வங்குகளில் இன்று மனித கரடிகள் ஆக்கிரமித்து உள்ளன !

பௌர்ணமி ஆனால் அந்த மலை கோவிலை கிரிவலம் சுற்றி வருகின்றனர் , கிரிவல பாதையில் தேனீர் , ஸ்நாக்ஸ் , போன்றவற்றை பிளாஸ்டிக் பயன் படுத்தி அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றன அதனை உண்ணும் விலங்குகளின் நிலைமை ?

யானைகள் தினமும் வந்து செல்லும் இந்த வன பகுதியில் !
பாதுகாப்பு பயிற்சிகள் இருக்கவே கூடாது என்பது தான் எனது நிலைபாடு ~!~

விவசாயி ஒருவர் கூறுகையில் :
ஆடுகள் , மாடுகள் சில நேரம் குண்டு அடி பட்டு மடிகின்றன என கூறுகின்றனர் !

"கஞ்சா" போன்ற போதை பொருட்கள் பயன் படுத்த இங்கு பலர் வருவதாக கூறுகின்றனர்>>>?

இவர்கள் செய்யும் தொல்லைகளினால் வன விலங்குகள் (யானைகள் ) சாலைகள் , ரயில் பாதைகளை கடக்க முற்படும் போது அடிபட்டு மடிந்து போகின்றன !

காட்டில் இவர்களுக்கான அனுமதித்த இடங்களையும் மீறி பல இடங்களில் அத்துமீறி தங்குதல் , புதிய பாதைகள் அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ...

ஒரு பயிற்சியாளர்கள் என்னை விசாரிக்கும் பொழுது பல நவீன ரக துப்பாகிகளை வைத்துதான் விசாரித்தார் , ஏன் பசித்தால் காட்டு விலங்குகளை உணவாகவும் உன்னுவோர் போல ? ரகசியமாக நடந்தாலும் நடக்கும் ! கேள்வி கேட்க யார் இருகிறார்கள் என தைரியம் ! “போல”
 

1 comment:

  1. Nice Info!!! keep it Up!

    Bharathi – SEO – Adsense – Web Hosting More Adsense Info,Bharathi – SEO – Adsense – Web Hosting web hosting ,Bharathi – SEO – Adsense – Web Hosting domain registration ,Bharathi – SEO – Adsense – Web Hosting classified websites ,Bharathi – SEO – Adsense – Web Hosting classifieds websites for sales

    More info Mail me – classiindia8@gmail.com Mobile Number – +919994251082

    ReplyDelete