copyrights @ umeshmarudhu-2012
வெப்பத்தின் சூட்டை தனிக்க சில தனியார் தொண்டு நிறுவனங்களும் , சில அரசியல் கட்சிகளும் இலவச ( விலை இல்லாத ) நீர் , மோர் பந்தல்களை துவங்கி உள்ளனர் ... இது சந்தோசம் தர கூடிய செய்தி .. அனால் அவர்கள் தட் பெருமைகளுக்காக முக்கிய சாலைகளை அக்கரமித்து , பந்தல் அமைத்து , மைக் செட் ( ஒலி பெறுக்கி) ,மேஜை நாற்காலி , மின்சார வசதி , மின் விசிறி , வாகனங்களை நிறுத்தும் வசதி என சகல வசதிகளை ஏற்படுத்தி பொது மக்களுக்கு பெரும் இடையூறு செய்கின்றனர் . இது உண்மையான பொது நல சேவையா ??? இது இப்படி பலரை சிரமம் படுத்தி மேலும் சுகாதாரம் அற்ற இடம் , அசுத்தமான குடிநீர் ,பிளாஸ்டிக் குவளைகள் ...என சொல்லிகொண்டே போகலாம் ... சரி எல்லாவற்றையும் விட தாங்கள் இலவசமாக பருகும் நீர் அருந்திய பிளாஸ்டிக் குவளைகளை முறையாக கையாள ஒரு குப்பை தொட்டியும் அவர்கள் வைப்பது இல்லை , குப்பை தொட்டிகள் வைத்திருந்தால் அதனுள் யாரும் போடுவதில்லை ... நிகழ்ச்சி முடிந்த பிறகு சுத்தம் செய்ய யாரும் முன்வருவதில்லை. இது போன்று சமீபத்தில் நடந்த தை பூசம் திருநாளில் லட்ச கணக்கான மக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து காவடிகளை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக கோவை - பொள்ளாச்சி சாலைகளில் பழனி செல்வதை வழக்கமாக கொண்டிருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் வழி முழுவதும் இலவச ( விலை இல்லாத ) நீர்மோர் ,சிறு உணவு ,என அனைத்தையும் பிளாஸ்டிக் ஆல் ஆனா பொருட்களில் விநியோகிகின்றனர் . பிளாஸ்டிக் கையாள்வதை பற்றி நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் , ஆனால் இது போன்ற செயல்களை நெறிமுறை படுத்தாத வரை பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது !!! நாளைய தூய்மையான பாரதம் நாம் கைகளில் தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும் !!!
No comments:
Post a Comment