Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Monday 12 March 2012

மரக்கன்றுகள் நடப்பட்டது 2012

copyrights @ umeshmarudhu-2012

பிறந்தநாள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது இடம் குறிச்சி செம்மொழி நினைவு பூங்கா (11-03-2012)
High Court Judge,Ulavar Sandhai Manger,Ward Members,Senior Citizens,Children participated and planted the Saplings

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் காலை , மாலை வேலைகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதில் மூத்தோர்கள் வந்து இளைப்பாறி செல்கின்றனர்.
பலவகை அறிய வகை பறவைகளும் இங்கு முப்பொழுதும் இசை அமைக்கின்றன.இங்கு வளர்க்கப்படும் மலர் கொடிகள் பல வண்ணமயமான வண்டுகளை ஈர்த்து வந்து அமரச்செய்து கடும் வாகன இரைச்சல்களுக்கும் இடையே தனது தனிக்குரலை நிலைப்படுத்துகின்றன.
பச்சை பட்டு உடுத்தியது போல , பங்குனி மாத வெயிலிலும் பசுமையை விரித்து அனைவரையும் கவர்ந்து ஈர்கின்றன.
இந்த பூங்காவில் அயராமல் துள்ளி விளையாடும் குழந்தைகளுக்கும் , நடை பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் களைப்பில் அயர்ந்து ஒதுங்க ஒரு மரம் கூட இல்லை.
"மரம் இல்லாத பூங்காவா ! " என்பதை உணர்ந்து முதற்கட்டமாக 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்தேன். அதன் படி மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நினைவு தினங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தினமும் அதை நட்டு வைத்தவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் அங்கே விளையாட வரும் குழந்தைகளுக்கு மரங்கள் நடுவது , அதை பராமறிப்பது ஆகியவற்றின் முக்கியதுவத்தை உணர்த்தி வருகிறேன்.
எனவே இளைப்பாறும் பூங்காவாக மட்டும் இல்லாமல் , நம் வாழ்வாதாரத்தை போதிக்கும் இடமாக திகழ்கிறது .
வேம்பு , புங்கை, மாங்கனி , நாவல் , மகாகனி , பாதனி காய் , வேங்கை , மாதுளை போன்ற பலவகையான பழம் தரும் , மலர் தரும் , நாற்றுகள் நடப்பட்டுள்ளன . இவை அனைத்தும் இனி வரும் காலங்களில் வளர்ந்து நின்று , நிழல் தந்து , சுவைக்க கனி தந்து , சுவாசிக்க சுத்தமான காற்றினைத் தந்து எல்லோரையும் மகிழ்விக்கின்ற மரங்களாக நிலைத்து நிற்கும்.
பல்வேறு பறவைகளுக்கு குடி இருக்கும் வீடாக அமையும்.

மரங்களை நடுவது பற்றி எல்லோரும் பல மேடைகளில் பேசலாம் , பல லட்ச லட்சமாக நடலாம் , அதனால் பலர் ஆதாயங்களைக் கூட தேடலாம் . ஆனால் அந்த லட்சங்களில் ஒரு சில நூறுகள் மரமாய் வளர்ந்த சுவடுகளை நான் இன்று வரை பார்க்கவில்லை.
நகர வளர்ச்சி என பல இயற்கை சொத்துகள் அளிக்கப்பட்டு பல அடுக்கு மாடி குடி இருப்புகலாகவும் , தொழிற்சாலைகளாகவும், பாலங்களாக மாறி உயர்ந்து நிற்கின்றன .கான்க்ரீட் கட்டடங்கள் அமைக்க மெம்மேலும் உயர உயர்ந்து நிற்கும் மரங்களை அவையின் குணம் , வயது வித்தியாசமின்றி கண்மூடித்தனமாக வெட்டுகின்றனர் .

எனது தாத்தா முன் ஒரு காலத்தில் கிராமப்பகுதியில் கோவை மாநகருக்கு வரும் பொழுது எப்பொழுதும் நிலவும் கடும் குளிரைச் சமாளிக்க சுவட்டர், குல்லா , போன்ற குளிர் தாங்கிகளை அணிந்து வருவார் எனவும் அப்போதெல்லாம் மாநகர் முழுவதும் மரங்கள் மட்டுமே உயர்ந்து வாழ்ந்ததாக அடிக்கடி கூறுவார் .
இன்று நான் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பார்த்தால் " தாத்தா பொய் கூறுகிறார் என அவரை கிண்டல் செய்யத்தோன்றுகிறது "!
இன்று வெயில் காலம் துவங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கத்தால் துடி துடிக்கிறோம் !
சரி , அவலங்கள் ஒரு புறம் இருக்கட்டும்,
இனி ஒரு விதி செய்வோம்

மரம் நடுவோம் !
மரம் வளர்ப்போம் !
மரம் வெட்டவும் மாட்டோம் , பிறரை வெட்டவும் விடமாட்டோம் !

நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் நாம் பூமியில் மானிடர் ஜென்மம் எடுத்து வாழ்ந்தததன் அடையலாம் ! ! !
நம்முடன் , நமக்கு பிறகு அழியாத சொத்துக்கள் ! ! !
நம் உயரிய எண்ணங்களின் வெளிப்பாடு
நாம் நட்டு வைத்த மரங்கள் பல நூற்றாண்டுகள் கடந்து நம்மை பற்றிச்சொல்லும் !!!
மர வங்கிகளை சேமித்து , நாளைய தேசத்திற்கு பரிசளிப்போம் ! ! !
மரம் வளர்போம் , வரலாறு படைப்போம்...
-உமேஷ்.ம

இதை யாவரும் உணர அனைவருக்கும் நேரடியாகவும் , ஊடகங்களிலும் , இணையதளங்களிலும் , முகநூல்களிலும் மிக முக்கிய செய்தியாய் பறப்புவோம் !
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மரங்கள் இல்லாத பூங்காக்களைத் தேர்வு செய்து தேவையான மரக்கன்றுகளை நட்டு அதனை அந்தப் பகுதியில் வாழும் சூழல் அக்கறையாளர்கள் உதவியுடன் சிறப்பாக வளர்க திட்டமிட்டுளேன்.

























No comments:

Post a Comment